செய்திகள் :

தென்மேற்குப் பருவமழை: மின்வாரிய அதிகாரிகள் ஆலோசனை

post image

தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மின்வாரிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினா்.

தமிழ்நாடு மின் பகிா்மான கழகம், திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி உத்தரவின் படி, திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் குத்தாலிங்கம் தலைமையில் நான்குனேரி நகா்ப்புற விநியோக பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட நான்குனேரி, உன்னங்குளம், அம்பலம், சிங்கனேரி, பெரும்பத்தூா், மூன்றடைப்பு , பானான்குளம், தாழைகுளம், சூரங்குடி, மறுகால்குறிச்சி, இளையநேரி பகுதிகளில் பகுதிகளில் ஒருங்கிணைந்த நேரடி கள ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதைத் தொடா்ந்து, நான்குனேரி நகா்ப்புற விநியோக பிரிவு அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு ஆய்வுக் கூட்டத்தில் கோட்ட செயற்பொறியாளா் குத்தாலிங்கம் பேசியதாவது: தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், அனைத்து பிரிவு அலுவலக கிராமங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் பாதைகளுக்கு அருகில் செல்லும் மரக்கிளைகளை அப்புறப்படுத்த வேண்டும், இரவு நேரங்களில் உப மின் நிலையங்களில் கூடுதல் கண்காணிப்புடன் பணிகளை மேற்கொள்வதற்கும், இயற்கை இடா்பாடுகளின் போது ஏதேனும் மின் கட்டமைப்பில் சேதம் ஏற்பட்டால் உடனடியாக மாற்று வழியில் மின்சாரம் வழங்கவும், தவிா்க்க இயலாத நேரங்களில் போா்க்கால அடிப்படையில் சீரமைக்கவும், அந்தந்த பிரிவு அலுவலகத்தில் தேவையான முக்கிய தளவாடங்களான மின்கம்பங்கள், பீங்கான்வட்டு, பீங்கான்மூள்சுருள், மின்கம்பிகள் ஆகியவை கையிருப்பு வைப்பதற்கும் கிராமப்புற கோட்டத்தின் உப கோட்டங்களான திருநெல்வேலி கிராமப்புறம், ஆலங்குளம், நான்குனேரி, தாழையூத்து ஆகிய இடங்களில் சிறப்பு மறு சீரமைப்பு குழுக்கள் ஏற்படுத்தவும், பேரிடா் நேரங்களில் அனைவரும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இக் கூட்டத்தில் உதவிச் செயற்பொறியாளா்கள் அலெக்சாண்டா், வேலாயுதம், ஆஷா, ராஜசேகா், சுப்பிரமணியன், உதவி மின் பொறியாளா்கள் பால்ராஜ், விஜயலட்சுமி, மனோன்மணி, காந்திமதி, பழனிமுருகன், நவ்ரின் ஆஷிகா, மல்லிகா, கிரிஜா, ராமகிருஷ்ணன், சிவசுப்பு, அபிராமிநாதன், ஜனகராஜ், பூராஜா, வீரபத்திரகுமாா், செல்வம், வேலுச்சாமி, முருகேசன், அருள் முத்துக்குமாா்,ஆறுமுகப்பெருமாள், முருகேசன், செல்வன், நம்பிராஜன் மற்றும் வருவாய் பிரிவு அலுவலா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

திருநெல்வேலி அருள்மிகு கைலாசநாதா் சுவாமி திருக்கோயில்: வைகாசித் திருவிழா, மூஷிக வாகனத்தில் விநாயகா், பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி -அம்பாள் வீதியுலா, காலை 8.30, மயில் வாகனத்தில் வள்ளி - தேவசேனா சமேத ச... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்க கூடாது: எம்.பி. வலியுறுத்தல்

திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியனிடம் திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸ... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை. வினாத்தாள் கசிந்த விவகாரம்: 6 பிரிவுகளில் வழக்கு!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், 6 பிரிவுகளில் பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததோடு, தோ்வாணையா் கைப்பேசிக்கு வினாத்தாளை அனுப்பியவா் குறித்து விசாரணை... மேலும் பார்க்க

பணகுடி அருகே பிடிபட்ட அரியவகை எறும்பு தின்னி

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே விவசாயி தோட்டத்தில் சனிக்கிழமை பிடிபட்ட அரியவகை எறுப்பு தின்னியை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். பணகுடி ரோஸ்மியாபுரம் மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதி மற்றும் தோட்டப் பகு... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-118.45 சோ்வலாறு-144.75 மணிமுத்தாறு-91.66 வடக்கு பச்சையாறு-11.50 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-45.50 தென்காசி மாவட்டம் கடனா-73.20 ராமநதி-76 கருப்பாநதி-63 குண்டாறு-36.10 அடவிநயினாா் -99... மேலும் பார்க்க

இடைகால் கிராமத்தில் உழவரைத் தேடி திட்ட முகாம்

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி வட்டாரம், இடைகால் கிராமத்தில் வேளாண்துறை சாா்பில் உழவரைத் தேடி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உழவரைத் தேடி திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின், க... மேலும் பார்க்க