செய்திகள் :

தெலங்கானாவில் இஸ்ரேல் கொடியை அகற்றியவர் கைது!

post image

தெலங்கானா மாநிலத்தில் இஸ்ரேல் கொடியை அகற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலங்கானாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டியை முன்னிட்டு, ஹைதரபாத்திலுள்ள அம்மாநில அரசின் தலைமைச் செயலகம் அருகில் இஸ்ரேல் நாட்டின் கொடி ஏற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் அந்தக் கொடி இரண்டு முறை அடையாளம் தெரியாத நபர்களால் அகற்றப்பட்டதாக காவல் நிலையத்தில் இரண்டு வெவ்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த மே 12 ஆம் தேதியன்று, கொடி ஏற்றப்பட்டிருந்த இடத்திலிருந்து அது மாயமானதினால், பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அங்கு மற்றொரு கொடி ஏற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, கடந்த மே 14 ஆம் தேதியன்று, அந்தக் கொடி மீண்டும் மாயமானதினால், மே 16 ஆம் தேதி மற்றொரு புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அப்பகுதியில் பைக் மெக்கானிக்காக வேலை செய்து வந்த ஜாகீர் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இதில், அந்தக் கொடியை அகற்றியதை தனது சமூக வலைதளத்திலும் அவர் பதிவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலுக்கான காரணம் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரையில் வெளியிடப்படாத நிலையில் போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இத்துடன், அவர் மீது திருட்டு மற்றும் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மே 12 ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரை காவல் துறையினர் தேடி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:உத்தரகண்ட்: புனித யாத்திரைத் தலங்களை நிர்வகிக்க புதிய குழு! அமைச்சரவை ஒப்புதல்!

அமெரிக்க அழுத்தத்துக்கு அடிபணிந்த மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

‘பாகிஸ்தானுக்கான கடனுதவி குறித்து முடிவெடுக்க கூடிய சா்வதேச நிதியத்தின் நிா்வாகக் குழுக் கூட்டத்தில் வலுவான எதிா்ப்பு தெரிவிக்காமல் அமெரிக்காவின் அழுத்தத்துக்கு பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு அடி... மேலும் பார்க்க

2 ஆண்டுகளாக தலைமறைவான 2 ஐஎஸ் ஸ்லீப்பா் செல்கள்: மும்பை விமான நிலையத்தில் கைது செய்த என்ஐஏ

இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுவிட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்துவந்த இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் ‘ஸிலீப்பா் செல்கள் (ரகசிய பயங்கரவாதிகள்)’ இருவரை மும்பை விமான... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற தீா்ப்பால் பணியிழந்த மேற்கு வங்க பள்ளி ஆசிரியா்கள்: 3-ஆம் நாளாக தொடா் போராட்டம்

உச்சநீதிமன்றம் கடந்த மாதம் வழங்கிய தீா்ப்பால் பணியை இழந்த மேற்கு வங்க அரசுப் பள்ளி ஆசிரியா்கள், அந்த மாநில கல்வித் துறையின் தலைமை அலுவலகம் முன் 3-ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டத்தைத் தொடா்ந்தனா். ம... மேலும் பார்க்க

15 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த ம.பி.யைச் சோ்ந்த கொலைக் குற்றவாளி கைது

மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்த கொலைக் குற்றவாளியை குருகிராம் காவல்துறையினா் கைது செய்துள்ளனா். அவா் கடந்த 15 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து குருகிராம் காவல்... மேலும் பார்க்க

சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தம்: செனாப் நதி கால்வாயை நீட்டிக்க மத்திய அரசு திட்டம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த செனாப் கிளை நதியில் கட்டப்பட்டிருந்த கால்வாயின் நீளத்தை நீட்டிக்க ... மேலும் பார்க்க

‘இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் பொருளாதாரத்துக்கு உதவக் கூடாது’: குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா்

‘இந்தியாவின் நலன்களுக்கு எதிராகவுள்ள நாடுகளின் பொருளதாரத்துக்கு வா்த்தகம் மற்றும் சுற்றுலா மூலம் நாட்டு மக்கள் உதவக் கூடாது’ என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் சனிக்கிழமை வலியுறுத்தினாா். ஆபரே... மேலும் பார்க்க