செய்திகள் :

தெலங்கானா: மத அடையாளங்களை அகற்றக் கூறி மாணவர்களை தாக்கிய பள்ளி முதல்வர் - கொதித்தெழுந்த பெற்றோர்கள்!

post image

தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள கோண்டோர் ஷைன் பள்ளியில் நடந்த ஒரு சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியின் முதல்வர் லட்சுமய்யா, மாணவர்கள் நெற்றியில் பொட்டு வைத்திருந்ததைக் கண்டித்து, அதை அகற்றும்படி கட்டாயபடுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

மேலும், சில மாணவர்களை கழிவறைக்கு அழைத்துச் சென்று, அவர்களது மத அடையாளத்தை நீக்கச் சொன்னதாகவும் கூறப்படுகிறது. மாணவர்களை அடித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் பெற்றோர்களிடையே கோபத்தை தூண்டியுள்ளது. இதனால் அவர்கள் பள்ளிக்கு முன்பு கூடி போராட்டம் நடத்தினர். இதற்கிடையில், முதல்வர் லட்சுமய்யா பள்ளிக்கு வராமல் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை

இந்த விவகாரம் தொடர்பாக, பள்ளித் தலைவர் (Chairman) மல்லா ரெட்டி, "ஒரு மாணவர் தனது மத அடையாளத்துடன் இருப்பதற்கு அவருக்கு உரிமை உள்ளது. அதை அகற்ற சொல்லி அவரை அடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது." என அவர் கூறினார்.

மேலும், மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, முதல்வரை உடனடியாக பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக அறிவித்தார்.

பள்ளி நிர்வாகம், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது. அனைத்து மதத்தினருக்கும் சமத்துவமான கல்வி பெறுவதற்கான பாதுகாப்பான சூழல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chandrababu Naidu: ``மூன்று மொழிகளையல்ல பல மொழிகளை ஊக்குவிப்பேன்'' - சந்திரபாபு நாயுடு

மும்மொழிக் கொள்கையைத் தமிழக ஆளும் திமுக அரசு, இந்தித் திணிப்பு என்று அரசியலாக்கி தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதாகவும், ஏற்காவிட்டால் கல்விக்கு இரண்டாயிரம் கோடி ஒதுக்க சட்டத்தில் இடமில்லை என்றும் ... மேலும் பார்க்க

கரூர்: `காலை முதல் இரவு வரை!' - செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற 12 மணி நேர சோதனை

தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயதீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூர் மாவட்டத்தில், அமைச்சருக்கு நெருங்கிய நண்பர்களான கொங்கு மெஸ் உரிமையாளர் சுப்பிரமணியின் ராயனூர் வீடு, ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: தனியார் மதுபான ஆலையில் அமலாக்கத் துறையினர் திடீர் சோதனை

தமிழக முழுவதும் அமலாக்கத் துறையினர் மதுபான ஆலை மற்றும் முக்கிய இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவடடத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் 20 - க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் சிக்கியிருக்க பைடனின் அரசியல் காரணமா... துணை வீரர் சென்னதென்ன?

நீண்ட நாள்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பாததற்கு அரசியலே காரணம் என்ற எலான் மஸ்க்கின் கருத்து சரியானது என்று வழிமொழிந்துள்ளார், விண்வெளி நிலையத்... மேலும் பார்க்க

விருதுநகர்: அதிமுக பொதுக்கூட்டம்; மேடையில் கட்சித் தொண்டரைத் தாக்கிய முன்னாள் அமைச்சர்!

விருதுநகரில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி, மாஃபா பாண்டியராஜன் உள்பட அ.தி.ம... மேலும் பார்க்க

`அறிஞர் அண்ணாவிடமிருந்த நேர்மை மு.க.ஸ்டாலினிடம் இல்லை...' - சொல்கிறார் இராம.ஸ்ரீநிவாசன்

புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் இராம ஸ்ரீநிவாசன் தலைமையில் மதுரையில் கையெழுத்து இயக்கம் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இராம ஸ்ரீநிவாசன், "புதிய கல்விக் கொள்கை மூலமா... மேலும் பார்க்க