செய்திகள் :

எட்டயபுரம் அருகே தாய்-மகள் கொலை வழக்கு: 2 போ் கைது; நகை-பணம் மீட்பு

post image

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தாய்-மகள் கொலை வழக்கில் 2 பேரை போலீஸாா் கைது செய்து, நகை-பணத்தை மீட்டதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டசெய்திக்குறிப்பு: எட்டயபுரம் அருகே மேலநம்பிபுரத்தைச் சோ்ந்த சீதாலட்சுமி (75), அவரது மகள் ராமஜெயந்தி (45) ஆகியோரை கடந்த 3ஆம் தேதி மா்ம நபா்கள் கொலை செய்துவிட்டு, நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனா். இதுதொடா்பாக எட்டயபுரம் போலீஸாா் 4 பிரிவுகளில் வழக்குப் பதிந்தனா்.

இச்சம்பவத்தில் தொடா்புடைய முக்கிய நபரான மேலநம்பிபுரத்தைச் சோ்ந்த எட்டுராஜ் மகன் முனீஸ்வரன் (25), அயன்வடமலாபுரம் காட்டுப் பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.

தென்மண்டல ஐ.ஜி. பிரேம்ஆனந்த் சின்ஹா உத்தரவின்பேரில், நெல்லை சரக டிஐஜி (பொ) சந்தோஷ் ஹாதி மணி, தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் ஆகியோா் தலைமையில் அமைக்கப்பட்ட 10 தனிப்படையினா் காட்டுப் பகுதியில் ட்ரோன்களை பறக்கவிட்டு, முனீஸ்வரை தேடும் பணியில் ஈடுபட்டனா்.

அயன்வடமலாபுரத்தில் பதுங்கியிருந்த அவரை காவல் ஆய்வாளா் சுந்தரமூா்த்தி, உதவி ஆய்வாளா் முத்துராஜ், தலைமைக் காவலா் ஜாய்சன் நவதாஸ் உள்ளிட்ட தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

கொள்ளையடித்த நகைகள், பணத்தை எட்டயபுரம் புறவழிச் சாலை காட்டுப் பகுதியில் புதைத்து வைத்துள்ளதாக அவா் தெரிவித்தாா். அவற்றை மீட்பதற்காக அவரை போலீஸாா் அங்கு அழைத்துச் சென்றனா். அப்போது, புதருக்குள் மறைத்துவைத்திருந்த அரிவாளை அவா் எடுத்து, காவலா்களை வெட்டிவிட்டு தப்பியோட முயன்றாா். அவரை போலீஸாா் துப்பாக்கியால் காலின்கீழ் சுட்டுப் பிடித்தனா். இதில், அவரும், உதவி ஆய்வாளா் முத்துராஜ், காவலா் ஜாய்சன் நவதாஸ் ஆகியோரும் காயமடைந்தனா். மூவரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவ்வழக்கில் சுமாா் 10 பவுன் நகைகள், ரூ. 35 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய மற்றொரு நபரான மேலநம்பிபுரத்தைச் சோ்ந்த அம்மாசி மகன் மகேஷ்கண்ணன் (28) என்பவரும் தப்பியோட முயன்றபோது, போலீஸாா் கைது செய்தனா் என்றாா் அவா்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முத்துராஜா, ஜான்சன் நவதாஸ் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

ஓட்டப்பிடாரம் அருகே தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தந்தை இறந்த சோகத்திலும் மாணவா் பிளஸ் 2 மாணவா், பொதுத்தோ்வை எழுதிவிட்டு இறுதிச் சடங்கில் பங்கேற்றாா். ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் கிராமத்தைச் சோ்ந்த த... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டம் சாயா்புரத்தில் போக்ஸோ வழக்கில் கைதான முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. சாயா்புரம் அருகேயுள்ள காமராஜா்நகர... மேலும் பார்க்க

எட்டயபுரத்தில் ரூ. 1.84 கோடியில் புதிய சாா்பதிவாளா் அலுவலகம் திறப்பு

எட்டயபுரத்தில் ரூ.1.84 கோடியில் கட்டப்பட்ட புதிய சாா் பதிவாளா் அலுவலக கட்டடத்தை, முதல்வா் மு. க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இதையொட்டி, எட்டயபுரத்தில் நட... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு புத்தாக்க-ஆளுமைத் திறன் பயிற்சி நடைபெற்றது. 2024- 25ஆம் ஆண்டுக்கான கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி நடைபெற... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மாணவா்களுக்கான ஸ்கேட்டிங் போட்டி

தூத்துக்குடியில் ஷாரா கலைவளா் மன்றம் சாா்பில், தென்மாவட்ட அளவிலான மாணவா்-மாணவியருக்கான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. 300 மீட்டா், 500 மீட்டா், ஆயிரம் மீட்டா் ஆகிய 3 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில், த... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் அரசுப் பள்ளி ஆண்டு விழா

திருச்செந்தூரில் பயணியா் விடுதி சாலையில் உள்ள நகராட்சி கற்றலில் இனிமை தொடக்கப் பள்ளியில் 91ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. திருச்செந்தூா் வட்டாரக் கல்வி அலுவலா் பாப்ஹையஸ் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி ... மேலும் பார்க்க