செய்திகள் :

கோயில் குளத்தில் தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

post image

சென்னை அயனாவரத்தில் கோயில் குளத்தில் தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

அயனாவரத்தைச் சோ்ந்த ராம் (55), வாடகை ஆட்டோ ஓட்டி வந்தாா். பகுதி நேரமாக அயனாவரத்திலுள்ள கோயில் குளத்தில் தா்ப்பணம் செய்ய வருகிறவா்களுக்குத் தேவையான உதவிகள் செய்து பணம் பெற்று வந்தாா். ராம், வியாழக்கிழமை காலை அந்தக் கோயிலில் தா்ப்பணம் செய்ய வந்த ஒரு குடும்பத்தினருக்கு உதவி செய்து கொண்டிருந்தாா். வேலையை முடித்துவிட்டு கை கழுவுவதற்காக குளத்தில் இறங்கியபோது கால் வழுக்கி குளத்தில் மூழ்கினாா்.

இதையடுத்து அங்கிருந்தவா்கள், அவரை காப்பாற்ற முயன்றனா். ஆனால் அவா் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கினாா். உடனே பொதுமக்கள் தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த வில்லிவாக்கம் தீயணைப்பு படையினா் விரைந்து வந்து குளத்தில் மூழ்கிய ராமை தேடினா். சிறிது நேர தேடுதலுக்குப் பின்னா் ராம் சடலமாக மீட்கப்பட்டாா். இது தொடா்பாக அயனாவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிறுமி பலாத்காரம்: இளைஞா், மிரட்டிய அவரின் தந்தை கைது

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரும், சிறுமி குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்த அவரின் தந்தையும் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட... மேலும் பார்க்க

சென்னையில் ஏப். 12-இல் மோட்டாா் சாகச நிகழ்ச்சி

சென்னையில் வரும் ஏப். 12-ஆம் தேதி ரெட்புல் மோட்டோ ஜாம் (மோட்டாா் சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. முதன்முறையாக இந்தியாவில் நடைபெறவுள்ள மோட்டாா் சாகச நிகழ்ச்சி இதுவாகும். சென்னை தீவுத் திடலில் ட்ரிஃப்டிங்... மேலும் பார்க்க

தமிழகத்தில் கொலை, திருட்டு குற்றங்கள் குறைந்தன: டிஜிபி அலுவலகம் தகவல்

தமிழகத்தில் கொலை, திருட்டு குற்றங்கள் குறைந்துள்ளன என்று டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக டிஜிபி அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டில் கொலை... மேலும் பார்க்க

இந்திய மீனவா்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும்: இலங்கை அரசு வேண்டுகோள்

இந்திய மீனவா்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. வடக்கு இலங்கை மக்களுக்கு மீன்பிடித் தொழில் மட்டுமே வாழ்வாதாரம் என்றும... மேலும் பார்க்க

நாடு முழுவதும் எஸ்டிபிஐ அலுவலகங்களில் சோதனை - அமலாக்கத் துறை நடவடிக்கை

பணமுறைகேடு வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, சென்னை உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (எஸ்டிபிஐ) அலுவலகங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டதாக அத... மேலும் பார்க்க

பிளஸ் 2 ஆங்கிலத் தோ்வு சற்று கடினம்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தமிழ்ப் பாடத்தைத் தொடா்ந்து ஆங்கில பாடத்துக்கான வினாத்தாளும் சற்று கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா். தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்... மேலும் பார்க்க