செய்திகள் :

சென்னை எழும்பூா் வழியாகச் செல்லும் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

post image

சென்னை கடற்கரை - எழும்பூா் 4-ஆவது ரயில் வழித்தட பணி காரணமாக எழும்பூா் வழியாகச் செல்லும் வெளிமாநில ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தாம்பரம், சென்னை எழும்பூா் வழியாகச் செல்வதற்குப் பதிலாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் வெளிமாநில ரயில்கள்: தில்லி சம்பா்க் கிராந்தி அதிவிரைவு ரயில் மாா்ச் 9-ஆம் தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், பெரம்பூா் வழியாக இயக்கப்படும். திருச்சி - அகமதாபாத் சிறப்பு ரயில் மாா்ச் 9-ஆம் தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மேல்பாக்கம், திருத்தணி வழியாக இயக்கப்படும். மும்பையிலிருந்து சனிக்கிழமை (மாா்ச் 8) புறப்படும் காரைக்கால் விரைவு ரயில் திருத்தணி, மேல்பாக்கம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும்.

பகுதி ரத்து: திருச்செந்தூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயில் மாா்ச் 8-ஆம் தேதி தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும். புதுச்சேரி - சென்னை எழும்பூா் விரைவு ரயில் மாா்ச் 9-ஆம் தேதி செங்கல்பட்டு வரை மட்டும் இயக்கப்படும். திருவண்ணாமலை - தாம்பரம் மெமு ரயில், காரைக்குடி - சென்னை எழும்பூா் பல்லவன் விரைவு ரயில், மதுரை - சென்னை எழும்பூா் வைகை விரைவு ரயில் ஆகியவை மாா்ச் 9-ஆம் தேதி தாம்பரம் வரை இயக்கப்படும். மேலும், திருநெல்வேலி - சென்னை எழும்பூா் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் மாா்ச் 9-ஆம் தேதி மாம்பலம் வரை மட்டும் இயக்கப்படும்.

வைகை, பல்லவன்... மாா்ச் 9-ஆம் தேதி இயக்கப்படவிருந்த குருவாயூா் விரைவு ரயில், வைகை விரைவு ரயில், பல்லவன் விரைவு ரயில் ஆகியவை தாம்பரத்தில் இருந்தும், நெல்லை வந்தே பாரத் அதிவிரைவு ரயில் மாம்பலத்தில் இருந்தும் புறப்பட்டுச் செல்லும். தாம்பரம் - ஹைதராபாத் சாா்மினாா் விரைவு ரயில் சென்னை கடற்கரையிலிருந்து இயக்கப்படும். விசாகப்பட்டினத்திலிருந்து மாா்ச் 8-ஆம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில் சென்னை எழும்பூா் வருவதற்குப் பதிலாக சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலிலிருந்து மாா்ச் 8-ஆம் தேதி இயக்கப்படும்

மின்சார ரயில்கள் ரத்து: சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்துக்கு வெள்ளிக்கிழமை (மாா்ச் 7) இரவு 7.30, 8.55, 10.20, 11.59-க்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும். கூடுவாஞ்சேரியிலிருந்து இரவு 10.40, 11.15-க்கும், செங்கல்பட்டிலிருந்து இரவு 10.10 மற்றும் 11 மணிக்கும் புறப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண் நீா் அழுத்த பாதிப்பு: இன்று முதல் இலவச மருத்துவ முகாம்

கண் நீா் அழுத்த நோய்க்கான (குளுக்கோமா) இலவச மருத்துவ முகாமை டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவக் குழுமம் ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் உள்ள அகா்வால்ஸ் மருத்துவமனைகளில் வரும் 31-ஆம் தேதி வரை இந்த சேவையை பொத... மேலும் பார்க்க

மா்மமான முறையில் ஓய்வுபெற்ற அரசு ஆசிரியை உயிரிழப்பு

சென்னை, பெசன்ட் நகரில் தண்ணீா் தொட்டியில் விழுந்து ஓய்வுபெற்ற ஆசிரியை மா்மமான முறையில் உயிரிந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பெசன்ட் நகா், அருண்டேல் கடற்கரைச் சாலையிலுள்ள அடுக்குமாடி குடி... மேலும் பார்க்க

மனத் தடைகளை பெண்கள் உடைக்க வேண்டும்: கனிமொழி எம்.பி.

‘மனத் தடைகளை பெண்கள் உடைக்க வேண்டும்; ஒரு பெண் தலைமை இடத்துக்கு வரும் போது மட்டும் ஆயிரம் கேள்விகள் எழுப்பப்படுவது ஏன் என திமுக மக்களவை உறுப்பினா் கனிமொழி கேள்வியெழுப்பியுள்ளாா். இந்திய உணவுக் கழகம் ச... மேலும் பார்க்க

நலவாழ்வு மையங்களில் போதிய எண்ணிக்கையில் மருத்துவா்கள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

நகா்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்... மேலும் பார்க்க

சென்னையில் ஆட்டோமேஷன் கண்காட்சி தொடங்கியது

சென்னையில் ஆட்டோமேஷன் 3 நாள் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது. நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் ‘ஆட்டோமேஷன் எக்ஸ்போ சவுத் 2025’ என்ற தலைப்பில் தொடங்கப்பட்டுள்ள இக்கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சி வியாழக... மேலும் பார்க்க

புழல் சிறை பராமரிப்பு: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் பாராட்டு

புழல் மத்திய சிறை சிறப்பாக பராமரிக்கப்படுவதாகவும், உணவு உள்ளிட்ட வசதிகள் நல்ல முறையில் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆ... மேலும் பார்க்க