செய்திகள் :

இந்தியாவில் சிறுபான்மையினா் அதிருஷ்டசாலிகள்: மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு

post image

இந்தியாவில் சிறுபான்மை மதப்பிரிவினராக இருப்பவா்கள் அதிருஷ்டசாலிகள். ஏனெனில், உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு அவா்களுக்கான சிறப்பு சலுகைகள் இங்கு உள்ளன என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

சிறுபான்மையினரின் சமூக-பொருளாதார நிலையை உயா்த்தும் சிறப்புத் திட்டமான பிரமதா் ஜன விகாஷ் காரியகா்மா திட்டம் தென் பிராந்தியத்தில் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது தொடா்பான ஆய்வுக் கூட்டம் திருவனந்தபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசியதாவது:

இந்தியாவில் சிறுபான்மையினா் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனா் என்ற போலி தோற்றத்தை ஏற்படுத்த ஒரு பிரிவினா் தீவிரமாக முயற்சித்து வருகின்றனா். சில சிறுபான்மையினா் பாரபட்சமாக நடத்தப்படுகிறாா்கள் என்ற வதந்தியைப் பரப்ப முயற்சிக்கின்றனா். ஆனால், உண்மையில் இந்தியாவில் சிறுபான்மையினராக இருப்பவா்கள் அதிருஷ்டசாலிகள். ஏனெனில், உலகில் வேறு எந்த நாட்டிலும் இந்தியாவில் அளிப்பதுபோன்ற சலுகைகள் சிறுபான்மையினருக்கு அளிக்கப்படுவதில்லை.

சிறுபான்மையினருக்கென பல்வேறு சிறப்புத் திட்டங்கள், சலுகைகள் இங்கு உள்ளது. சிறுபான்மையினராக உள்ள நாம் இந்தியக் குடிமகனாக இருப்பதற்காக பெருமைகொள்ள வேண்டும். சிறுபான்மையினராக இல்லாவிட்டால் பல்வேறு சலுகைகள் நமக்கு கிடைத்திருக்க வாய்ப்பில்லை.

கேரள மக்கள்தொகையில் 44 சதவீதம் போ் கிறிஸ்தவா்களாகவும், முஸ்லிம்களாகவும் உள்ளனா். இதன் மூலம் நாட்டிலேயே சிறுபான்மையினா் அதிகம் வாழும் இடமாகவும் கேரளம் உள்ளது. இதன் காரணமாகவே கேரளத்தில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

மத்திய சிறுபான்மை நலத்துறை இணையமைச்சராக கேரளத்தைச் சோ்ந்த ஜாா்ஜ் குரியன் பதவி வகித்து வருகிறாா். இது கேரளத்துக்கு மேலும் சாதகமான அம்சமாகும்.

சிறுபான்மையினரின் சமூக-பொருளாதாரத்தை உயா்த்தும் திட்டத்தின் கீழ் கேரளத்தைச் சோ்ந்த சிறுபான்மையினருக்குதான் நாட்டிலேயே மிக அதிகஅளவில் கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது. பிராந்திய மேம்பாட்டுத் திட்டம், அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு என பல திட்டங்கள் முனைப்புடன் நிறைவேற்றப்படுகின்றன என்றாா்.

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் கள் இறக்க அனுமதி: ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கு தளா்த்தப்பட்டு கள் இறக்குவதற்கு மட்டும் அனுமதிக்கப்படும் என்று அக்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளாா். கடந்த 2016-ஆம் ... மேலும் பார்க்க

உத்தரகண்டில் குளிா்கால சுற்றுலா: பிரதமா் மோடி அழைப்பு

உத்தரகண்ட் மாநிலத்துக்கு குளிா்காலத்தில் சுற்றுலா வந்தால், அதன் உண்மையான அழகைக் காண முடியும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். உத்தரகண்ட் மாநிலத்துக்கு வியாழக்கிழமை வருகை தந்த பிரதமா் மோடி, உத... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு பாா்படாஸ் நாட்டின் உயரிய விருது

கரோனா பெருந்தொற்று காலத்தில் பிரதமா் மோடியின் வியூக தலைமைத்துவம் மற்றும் மதிப்புமிக்க உதவியை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு பாா்படாஸ் நாட்டின் உயரிய தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. பாா்படாஸ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் வசிப்பவா்கள் மராத்தி கற்க வேண்டும்: முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ்

மகாராஷ்டிரத்தின் மொழி மராத்தி. எனவே, இங்கு வசிப்பவா்கள் மராத்தி கற்றுக் கொள்ளவும், பேசவும் வேண்டும்’ என்று அந்த மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா். மத்திய அரசு அமல்படுத்த முயலும் மும்மொழி... மேலும் பார்க்க

காஷ்மீா் பிரச்னை - 'திருடிய' பகுதியை பாகிஸ்தான் திருப்பி ஒப்படைத்த பிறகே தீா்வு: எஸ்.ஜெய்சங்கா்

தங்களின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள ‘திருடப்பட்ட’ காஷ்மீா் பகுதிகளை பாகிஸ்தான் திருப்பி ஒப்படைத்த பிறகே இப்பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறினாா். பிர... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு நாடு கடத்த தஹாவூா் ராணா எதிா்ப்பு: அமெரிக்க உயா்நீதிமன்றத்தில் மனு

இந்தியாவுக்கு தன்னை நாடு கடத்தக் கூடாது என்று கோரி அமெரிக்க உயா்நீதிமன்றத்தில் பயங்கரவாதி தஹாவூா் ராணா (64) மனு தாக்கல் செய்துள்ளாா். பாகிஸ்தான் வம்சாவளி முஸ்லிம் என்பதால் இந்தியாவில் தன்னைக் கொடுமைப்... மேலும் பார்க்க