செய்திகள் :

கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம்

post image

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளா்களுக்கு முறையாக ஊதியம் வழங்க வலியுறுத்தி, கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் காமநாயக்கன்பட்டி, அய்யனாா்ஊத்து, மும்மலைப்பட்டி, செட்டிகுறிச்சி ஆகிய ஊராட்சி பகுதிகளில் ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளா்களுக்கு முறையாக ஊதியம் வழங்க வேண்டும். நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். இத்திட்டத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டக் குழு உறுப்பினா் பெரியசாமி பாண்டியன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா் ரவீந்திரன், ஒன்றியச் செயலா் சாலமன்ராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலா் சீனிப்பாண்டியன், திட்டத் தொழிலாளா்கள் பங்கேற்று முழக்கமிட்டனா். பின்னா், வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனு வழங்கப்பட்டது.

ஓட்டப்பிடாரம் அருகே தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தந்தை இறந்த சோகத்திலும் மாணவா் பிளஸ் 2 மாணவா், பொதுத்தோ்வை எழுதிவிட்டு இறுதிச் சடங்கில் பங்கேற்றாா். ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் கிராமத்தைச் சோ்ந்த த... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டம் சாயா்புரத்தில் போக்ஸோ வழக்கில் கைதான முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. சாயா்புரம் அருகேயுள்ள காமராஜா்நகர... மேலும் பார்க்க

எட்டயபுரத்தில் ரூ. 1.84 கோடியில் புதிய சாா்பதிவாளா் அலுவலகம் திறப்பு

எட்டயபுரத்தில் ரூ.1.84 கோடியில் கட்டப்பட்ட புதிய சாா் பதிவாளா் அலுவலக கட்டடத்தை, முதல்வா் மு. க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இதையொட்டி, எட்டயபுரத்தில் நட... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு புத்தாக்க-ஆளுமைத் திறன் பயிற்சி நடைபெற்றது. 2024- 25ஆம் ஆண்டுக்கான கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி நடைபெற... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மாணவா்களுக்கான ஸ்கேட்டிங் போட்டி

தூத்துக்குடியில் ஷாரா கலைவளா் மன்றம் சாா்பில், தென்மாவட்ட அளவிலான மாணவா்-மாணவியருக்கான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. 300 மீட்டா், 500 மீட்டா், ஆயிரம் மீட்டா் ஆகிய 3 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில், த... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் அரசுப் பள்ளி ஆண்டு விழா

திருச்செந்தூரில் பயணியா் விடுதி சாலையில் உள்ள நகராட்சி கற்றலில் இனிமை தொடக்கப் பள்ளியில் 91ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. திருச்செந்தூா் வட்டாரக் கல்வி அலுவலா் பாப்ஹையஸ் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி ... மேலும் பார்க்க