செய்திகள் :

தெ.ஆப்பிரிக்கா: விஷம் வைத்து யானை கொலை; 100-க்கும் மேற்பட்ட கழுகுகள் பலி

post image

தென்னாப்பிரிக்காவில் வேட்டைக்காரர்களால் 100-க்கும் மேற்பட்ட கழுகுகள் பலியாகின.

தென்னாப்பிரிக்காவில் பல்வேறு வகை உயிரினங்களை வேட்டைக்காரர்கள் வேட்டையாடி வருகின்றனர். அதனைத் தடுக்கும் முயற்சியில் அந்நாட்டு அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், அந்நாட்டு தேசிய பூங்காவில் யானை ஒன்றை விஷம்வைத்து, வேட்டைக்காரர்கள் கொன்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து. விஷம்வைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட யானையின் சடலத்தை சுமார் 200 கழுகுகள் (பிணந்தின்னி அல்லது ராஜாளி கழுகுகள்) கொத்தித் தின்றன. இதனையடுத்து, அவையும் விஷத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு, 123 கழுகுகள் பலியாகின.

மேலும், 83 கழுகுகள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்கு உள்படுத்தப்பட்டுள்ளன. இது, அவையின் இனப்பெருக்கக் காலம் என்றும் கூறப்படுகிறது.

வேட்டைக்காரர்களிடமிருந்து விலங்குகளை பாதுகாப்பது என்பது தினசரி போராக இருப்பதாக பூங்கா நிர்வாகம் கூறுகிறது.

புதிய போப் தேர்வானார்! முதல் முறையாக அமெரிக்கருக்கு வாய்ப்பு!

கத்தோலிக்கத் திருச்சபையில் மதகுருவாக புதிய போப் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.புதிய போப் ஆண்டவரைத் தோ்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற கார்டினல்களின் முதல் நாள் கூட்டத்தில் இறுதி மு... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு

பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேறுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவி வரும்நிலையில், பாகிஸ்தானின் லாகூரில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேறுமாறு அல்லது ப... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்! பாகிஸ்தான் பங்குச்சந்தையிலும் சிவப்புமயம்!

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வரும்நிலையில், அந்நாட்டு பங்குச்சந்தை சரிந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் தொடர்ச்சியாக, பாகிஸ்தானின் கராச்சி பகுதியில... மேலும் பார்க்க

தாயகத்தை விட்டு வெளியேறினார் வங்கதேசத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர்!

வங்கதேசத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் ஹமீத் அவரது தாயகத்தை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற ... மேலும் பார்க்க

லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு!

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9... மேலும் பார்க்க

புதிய போப் தேர்வு: முதல்கட்ட வாக்கெடுப்பில் முடிவு எட்டப்படவில்லை!

புதிய போப்பை தோ்ந்தெடுப்பதற்கான தேர்தலில், முதல்கட்ட வாக்கெடுப்பில் முடிவு எட்டப்படாததால் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.கத்தோலிக்க திருச்சபையின் 266-ஆவது போப் பிரான்சிஸ் வயது முதிா்வு காரண... மேலும் பார்க்க