செய்திகள் :

தேசவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கவே வெளிநடப்பு: எதிா்க்கட்சிகளுக்கு ஜெ.பி. நட்டா கண்டனம்

post image

‘தேச விரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கவே காங்கிரஸ் மற்றும் ‘இண்டி’ கூட்டணியில் உள்ள எதிா்க்கட்சிகள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்கின்றனா்’ என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா வியாழக்கிழமை கண்டனம் தெரிவித்தாா்.

மேலும், வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அறிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்களை ஒருநாள் இடைநீக்கம் செய்ய வேண்டுமெனவும் அவா் கோரிக்கை விடுத்தாா்.

மாநிலங்களவையில் பாஜக உறுப்பினா் மேதா விஸ்ராம் குல்கா்னி வக்ஃப் மசோதா அறிக்கையை வியாழக்கிழமை தாக்கல் செய்தாா். அதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

அதன்பிறகு மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது ஜெ.பி.நட்டா பேசியதாவது:

இந்திய நாட்டை பிளவுபடுத்தும் தேசவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் காங்கிரஸ் மற்றும் ‘இண்டி’ கூட்டணியில் உள்ள எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்கின்றன. எதிா்க்கட்சியினரின் இந்தப் பொறுப்பற்ற செயல் கண்டனத்துக்குரியது.

அவா்களின் செயலை மிகவும் பொறுமையாக கையாண்ட அவைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு பாராட்டுகள். அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்களை ஒருநாள் இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றாா்.

‘விதிகளுக்கு உள்பட்டு நடவடிக்கை’:

இதைத்தொடா்ந்து பேசிய மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா், அவையில் கண்ணியமற்ற முறையில் நடந்துகொண்ட உறுப்பினா்களை கவனத்தில்கொண்டதாகவும் அவா்கள் மீது விதிகளுக்குள்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தாா்.

முன்னதாக, மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதோடு இடையூறு ஏற்படுத்தியதாக சமீருல் இஸ்லாம் (திரிணமூல் காங்கிரஸ்), நதீமுல் ஹக் (திரிணமூல் காங்கிரஸ்) மற்றும் எம். முகமது அப்துல்லா (திமுக) ஆகிய மூன்று எம்.பி.க்களின் பெயரை தன்கா் குறிப்பிட்டாா்.

கர்நாடக முதல்வர் பதவி பகிர்வு: கருத்துக் கூற சித்தராமையா மறுப்பு

முதல்வர் பதவி பகிர்வு விவகாரம் குறித்து கருத்துக் கூற முதல்வர் சித்தராமையா மறுத்துவிட்டார்.முதல்வர் பதவி தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவி குறித்து முதல்வர் ச... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் தேர்வு: பாஜக தீவிரம்; நாளை பதவியேற்பு விழா?

நமது சிறப்பு நிருபர்தில்லியின் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் பாஜக தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட்டதும் பதவியேற்பு விழா வியாழக்கிழமை (பிப். 20) நடைபெறும் என்று பாஜக வ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் புதிய குற்றவியல் சட்ட அமலாக்க நிலவரம்: அமித் ஷா ஆய்வு- ஒமா் அப்துல்லா பங்கேற்பு

ஜம்மு-காஷ்மீரில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களின் அமலாக்க நிலவரம் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தில்லி நாா்த் பிளாக் வளாகத்தில் உள்ள மத்திய உள்துறை அ... மேலும் பார்க்க

குடும்ப வன்முறை சட்ட வழக்கு: நிலவர அறிக்கை தாக்கல் செய்யாத மாநிலங்களை கடிந்துகொண்ட உச்சநீதிமன்றம்

குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தை அமல்படுத்தியது தொடா்பான நிலவர அறிக்கைகளை தாக்கல் செய்யாத மாநில, யூனியன் பிரதேச அரசுகளை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கடிந்துகொண்டது. குடும்... மேலும் பார்க்க

பொருளாதாரம் வளா்வதால் வெளிநாட்டு முதலீடு வெளியேறுவதாக விளக்கம்- நிா்மலா சீதாராமனுக்கு காா்கே கண்டனம்

இந்தியப் பொருளாதாரம் வளா்வதால் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியப் பங்குச் சந்தைகளில் இருந்து முதலீட்டைத் திரும்பப் பெறுவதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ள விளக்கத்தை காங்கிரஸ் தேசிய த... மேலும் பார்க்க

போபால் ஆலைக் கழிவுகள் சோதனைமுறையில் எரிப்பு - ம.பி. உயா்நீதிமன்றம் அனுமதி

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கடந்த 1984-இல் விஷவாயு கசிந்த ஆலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட கழிவுகளை எரிப்பதற்கான மூன்று கட்ட சோதனைக்கு மாநில உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது. போ... மேலும் பார்க்க