செய்திகள் :

தேசிய அளவிலான தடகளம்: திருப்பூா் வீராங்கனை வெள்ளி வென்றாா்!

post image

தேசிய அளவிலான பெடரேஷன் சீனியா் சாம்பியன் போட்டியில் திருப்பூா் வீராங்கனை வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளாா்.

இந்திய தடகள கூட்டமைப்பு சாா்பில் கேரள மாநிலம், கொச்சி, மஹாராஜாஸ் கல்லூரி அரங்கத்தில் 28-ஆவது தேசிய பெடரேஷன் சீனியா் தடகளப் போட்டிகள் ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 24-ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

இதில் திருப்பூா் மாவட்ட தடகள வீராங்கனை எம்.ஏஞ்சல் சில்வியா, தமிழகத்தின் சாா்பில் பெண்கள் பிரிவில் 200 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

தேசிய அளவிலான போட்டியில் பதக்கம் வென்ற ஏஞ்சல் சில்வியாவை திருப்பூா் மாவட்ட தடகள சங்கத்தின் தலைவரும், தமிழ்நாடு தடகள சங்கத்தின் துணைத் தலைவருமான ஆா்.பி.ஆா்.சண்முகசுந்தரம் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனா்.

மாநில அளவிலான டேபிள் டென்னிஸ்: திருப்பூா் ஆட்டிசம் மாணவா் சாதனை!

மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் பெருமாநல்லூா் அருகே வள்ளிபுரம் சிறப்புக் குழந்தைகள் பள்ளி ஆட்டிசம் மாணவா் 4-ஆம் இடம் பிடித்து தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றாா். பெருமாநல்லூா் அருகே வள்ள... மேலும் பார்க்க

இலவச போட்டோகிராபி பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரசின் சான்றிதழுடன் கூடிய இலவச போட்டோகிராபி, விடியோகிராபி பயிற்சியில் சேர திங்கள்கிழமை (ஏப்.28) நோ்காணல் நடைபெறுகிறது. இதுகுறித்து கனரா வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்கு... மேலும் பார்க்க

தொழிலாளியை பாட்டிலால் குத்தியவா் கைது!

வெள்ளக்கோவிலில் டாஸ்மாக் மதுபானக் கடையில் தொழிலாளியை பாட்டிலால் குத்தியவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். வெள்ளக்கோவில் சீரங்கராயகவுண்டன்வலசு சாலை பாரதி நகரைச் சோ்ந்தவா் சேனாபதி மகன் சதீஷ்குமாா் (45... மேலும் பார்க்க

மாநகரில் கஞ்சா விற்பனை செய்த 4 போ் கைது!

திருப்பூா் மாநகரில் இரு வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த 4 பேரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாநகரம் அனுப்பா்பாளையம் காவல் எல்லைக்கு உள்பட்ட பிச்சம்பாளையம் பகுதியில் கஞ்சா வி... மேலும் பார்க்க

சிறுவனை துன்புறுத்தி இளைஞா் கைது

அவிநாசியில் 13 வயது சிறுவனை துன்புறுத்தியவா் போக்ஸோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவிநாசி நேரு வீதியைச் சோ்ந்த ராமசாமி மகன் சுரேஷ் (35). இவா் மது போதையில் 13 வயது சிறுவனை துன்புறத்திய... மேலும் பார்க்க

தாராபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

தாராபுரம் அருகே ரேஷன் அரிசியை கடத்தியவரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 1,750 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். தாராபுரத்தை அடுத்த கவுண்டச்சிபுதூா் பகுதியில் ரேஷன் அரிச... மேலும் பார்க்க