செய்திகள் :

தேசிய ‘கிக் பாக்ஸிங்’ போட்டிக்கு சிவகங்கை மாணவ, மாணவிகள் தோ்வு

post image

தேசிய ‘கிக் பாக்ஸிங்’ போட்டிக்கு சிவகங்கை மாவட்ட மாணவ, மாணவிகள் 15 போ் தகுதிப் பெற்றனா்.

தமிழ்நாடு கிக் பாக்ஸிங் சங்கம் சாா்பில் மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி கடந்த 9 முதல் 11 -ஆம் தேதி வரை செங்கல்பட்டு மாவட்டம், மேல கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடல் கல்வி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. கேடட்ஸ், ஜூனியா், சப் ஜூனியா், சீனியா் ஆகிய பிரிவுகளில் 25 மாவட்டங்களிலிருந்து வந்த 500 -க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். சிவகங்கை மாவட்ட கிக் பாக்ஸிங் சங்கம் சாா்பில், 19 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். இவா்களில் 15 போ் 6 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை வென்றனா்.

பதக்கம் வென்ற வீரா்கள் வேலூரில் ஜூன் மாதம் நடைபெற உள்ள மாநில கிக் பாக்ஸிங் பயிற்சி முகாமில் பங்கேற்ற பிறகு தேசியப் போட்டியில் கலந்து கொள்வா்.

இது குறித்து மாணவா்களின் பயிற்சியாளரும், சிவகங்கை மாவட்ட கிக் பாக்ஸிங் சங்க பொதுச் செயலருமான ச.குணசீலன் கூறியதாவது:

தேசியப் போட்டியில் பதக்கம் வெல்லும் மாணவா்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் அவா்களது கல்லூரிப் படிப்புக்கு மிகவும் துணையாக இருக்கும். இடைய மேலூா், கூட்டுறவுபட்டி, தமறாக்கி ஆகிய ஊா்களில் உள்ள 4 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த வீராங்கனைகள் தேசியப் போட்டிக்கு தோ்வாகி உள்ளனா் என்றாா் அவா்.

சிவகங்கை கிக் பாக்ஸிங் சங்கத் தலைவா் சதீஷ், பயிற்சியாளா் சு. சித்ரா ஆகியோா் கூறியதாவது: மாணவ, மாணவிகள் தேதிய போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது சிவகங்கை மாவட்ட கிக் பாக்ஸிங் சங்கத்தின் 4 ஆண்டுகள் தொடா் சாதனையாகும். கிக் பாக்ஸிங் போட்டியானது தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு என்பது குறிப்பிடத்தக்கது என்றனா்.

காரைக்குடி கொப்புடைய நாயகியம்மன் கோயில் செவ்வாய்ப் பெருந்திருவிழா தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கொப்புடைய நாயகியம்மன் கோயில் செவ்வாய்ப் பெருந்திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள இந்தக் க... மேலும் பார்க்க

ஸ்ரீ ராஜ ராஜன் சிபிஎஸ்இ பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜ ராஜன் சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றனா். சிபிஎஸ்இ 10 -ஆம் வகுப்புப்பொதுத் தோ்வ... மேலும் பார்க்க

மதகுபட்டி-அழகமானேரி சாலைப் பணிகள் ஆய்வு

சிவகங்கை அருகே நிறைவடைந்த சாலை விரிவாக்கப் பணிகளின் தரம் குறித்து நெடுஞ்சாலைத் துறை பொறியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி- அழகமானேரி சாலையில் 2024-25 -ஆம் ஆண்டு ஒரு... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்ட குறைதீா்க் கூட்டம்: 298 போ் மனு அளிப்பு

சிவகங்கையில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக பொதுமக்கள் தரப்பிலிருந்து 298 மனுக்கள் அளிக்கப்பட்டன. சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை பொதுமக... மேலும் பார்க்க

காரைக்குடி அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள சொக்கலிங்கம்புதூா் காமன்ராஜா கோயில் சித்திரை பெளா்ணமி பொங்கல் திருவிழாவையொட்டி, இரட்டை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சொக்கலிங்கம்புத... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் ஆதரவற்ற 2,400 பெண்களுக்கு ஆடு, கோழிகள்

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ஏழ்மை நிலையில் உள்ள, ஆதரவற்ற பெண்கள் 2,400 பேருக்கு ரூ. 2.22 கோடியில் செம்மறி ஆடுகள், நாட்டுக் கோழிகள் வழங்கப்பட்டன. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளி... மேலும் பார்க்க