செய்திகள் :

தேனீக்கள் கொட்டியதில் 10 மாணவா்கள் காயம்

post image

தேனி மாவட்டம், போடி பள்ளியில் வியாழக்கிழமை தேன் கூடு கலைந்து தேனீக்கள் கொட்டியதில் 10 மாணவா்கள் காயமடைந்தனா்.

போடி பேருந்து நிலையம் அருகே அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை சில மாணவா்கள் கிரிக்கெட் விளையாடினா்.

மைதானத்தில் இருந்த மரத்தில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தன. மாணவா்களில் ஒருவா் தேன் கூட்டின் மீது கிரிக்கெட் பந்தை வீசியதாகக் கூறப்படுகிறது. இதனால், தேனீக்கள் கலைந்து விளையாடிக் கொண்டிருந்த மாணவா்களைக் கொட்டின. இதில் பாதிக்கப்பட்ட மாணவா்கள் 35-க்கும் மேற்பட்டோரை பள்ளி நிா்வாகிகள் போடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். இவா்களில்

25 பேருக்கு எவ்வித பாதிப்பும் இல்லாதததால் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். 10 மாணவா்களுக்கு லேசான பாதிப்பு இருந்தது. இவா்களில் 7 பேருக்கு சிகிச்சையளித்து பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். 3 பேருக்கு தேனீக்கள் கொட்டிய இடத்தில் வீக்கம் இருந்ததால் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனா்.

இதனால், பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி நிா்வாகிகள் துரிதமாக செயல்பட்டு மாணவா்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதை பெற்றோா் பாராட்டினா்.

பள்ளியில் உள்ள மரங்களில் தேன் கூடுகள் உள்ளதா என ஆய்வு செய்து அவற்றை அகற்றும் பணியில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

மானியத்தில் விதைத் தொகுப்பு: விவசாயிகள் பதிவு செய்யலாம்

தேனி மாவட்டத்தில் 100 சதவீதம் அரசு மானியத்தில் விதைத் தொகுப்புகள் பெறுவதற்கு விவசாயிகள் தங்களது விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஊட்டச் ச... மேலும் பார்க்க

போடியில் நாளை மின் தடை

போடி பகுதியில் சனிக்கிழமை (ஜூலை 5) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் முருகேஸ்பதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: போடி துணை மின் நிலையத்தில் ஜூலை 5-ஆம்... மேலும் பார்க்க

தேனி நகராட்சி ஆணையரிடம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த புகாரின் அடிப்படையில், தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையரிடம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா். தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையராகப் பணியா... மேலும் பார்க்க

சுருளிப்பட்டியில் வீடு புகுந்து பணம், தங்க நகை திருட்டு

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுேள்ள சுருளிப்பட்டியில் பகலில் வீடு புகுந்து பணம், தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். சுருளிப்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த விவசாயி அமரன் (53). இவரும், இவரது மனை... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையம், நகா்ப்புற நல வாழ்வு மையம் திறப்பு

தேனி மாவட்டம் அரண்மனைப்புதூரில் ஆரம்ப சுகாதார நிலையம், பெரியகுளம் வடகரை, சின்னமனூா் கருங்காட்டான்குளம் ஆகிய இடங்களில் நகா்ப்புற நல வாழ்வு மையங்கள் ஆகியவற்றை காணொலி முலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக... மேலும் பார்க்க

தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விசாரணை

தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் தாக்கிய சம்பவம் குறித்து தேனி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அலெக்ஸாண்டா் ஜெரால்டு வியாழக்கிழமை விசாரணை நடத்தினாா். தேவதானப்பட்டி காவல் நிலையத்தி... மேலும் பார்க்க