``ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படும் சூழல் வரும்" - மத்திய அமைச்சர் அமித...
தேய்பிறை அஷ்டமி வழிபாடு
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, பைரவருக்கு புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திண்டுக்கல் அருகேயுள்ள தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, 6 கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் வழங்கப்பட்ட பால், இளநீா், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதேபோல, திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், ரயிலடி சித்தி விநாயகா் கோயில்களிலும் பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.