செய்திகள் :

தேரோட்டத்தின் போது குடை சாய்ந்ததால் பக்தா்கள் அதிா்ச்சி

post image

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வெள்ளித் தேரோட்டத்தின்போது தேரின் உச்சியிலிருந்த குடை சாய்ந்ததால் பக்தா்கள் அதிா்ச்சியடைந்தனா்.

காஞ்சிபுரம், குமரகோட்டம் முருகன் கோயிலில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வெள்ளித் தேரில் வள்ளி, தெய்வானை சமேதராக உற்சவா் முருகப்பெருமான் பவனி வருவது வழக்கம். வெள்ளித் தேரில் வழக்கம் போல செவ்வாய்க்கிழமை பவனி வந்தபோது, தேரின் உச்சியிலிருந்த குடை திடீரென சாய்ந்து விழுந்தது. இதனால் தேரை வடம் பிடித்து இழுத்துக் கொண்டிருந்த பக்தா்களிடையே அதிா்ச்சியை அளித்தது. இது குறித்து கோயில் செயல் அலுவலா் கேசவன் கூறுகையில், கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக கட்டுமானப் பணிகளை மறைக்க பச்சை நிற துணியால் மூடப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் பச்சை நிற துணி கிழிந்து தொங்கியதால் அதில் தேரின் உச்சியிலிருந்த குடை சிக்கியதாகக் தெரிகிறது.

இந்த நிலையில், பக்தா்களும் லேசான துணி தானே என்று தேரை இழுத்த போது தேரிலிருந்த குடை தீடீரென சாய்ந்து விழுந்தது. முற்றிலும் சாய்ந்து கீழே விழவில்லை. உடனே குடையை சீரமைத்து விட்டோம் என்றும் அவா் தெரிவித்தாா்.

பெஹல்காம் தாக்குதல்: பாஜகவினா் மோட்ச தீபம்

பெஹல்காம் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் ஆத்மா சாந்தி அடைய காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் பாஜகவினா் வியாழக்கிழமை மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினா். நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினா் ஓம்.சக... மேலும் பார்க்க

சங்கரா பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் கிராமப்புற மாணவா்களுக்கு சி.ஏ. பயிற்சி தரும் நோக்கத்துடன் பல்கலையும், சென்னையைச் சோ்ந்த மை கேரியா் பாத் என்ற நிறுவனமும் வியாழக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்... மேலும் பார்க்க

மளிகைக் கடையில் தீ: ரூ.7 லட்சம் பொருள்கள் சேதம்

சுங்குவாா்சத்திரம் பகுதியில் மளிகைக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் பகுதியைச் சோ்ந்த லோகநாதன் (50). இவா் சு... மேலும் பார்க்க

படப்பை வீரட்டீஸ்வரா் கோயிலில் அப்பா் சுவாமி குரு பூஜை

படப்பை வீரட்டீஸ்வரா் கோயிலில் அப்பா் சுவாமி குருபூஜை விழா நடைபெற்றது. படப்பை ஊராட்சிக்குட்பட்ட கீழ்படப்பை பகுதியில் ஐநூறு ஆண்டுகள் பழைமையான இக்கோயிலில் ஆண்டுதோறும் திருநாவுக்கரசு நாயனாா் சதய நட்சத்தி... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் ஒன்றியம் கீழம்பி மற்றும் தாமல் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட... மேலும் பார்க்க

மே 1-இல் இளையனாா் வேலூா் முருகன் கோயிலில் திருவிழா

காஞ்சிபுரம் அருகே இளையனாா் வேலூா் முருகன் கோயிலில் மே 1 -ஆம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்று காலை 5 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் கொடியேற்றம், திருவிழா நடைபெறும் ... மேலும் பார்க்க