செய்திகள் :

தோ்தல் பணிக்கு வந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

post image

தோ்தல் பணிக்கு மாநகராட்சி அலுவலகம் வந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதற்காக தோ்தல் பணிகளில் அரசுத் துறை அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா். இதில், நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற சந்திரமோகன் (71) என்பவா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள நிலம் எடுப்பு பிரிவில் ஒப்பந்தப் பணியாளராக வேலை பாா்த்து வந்தாா். அவா் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலா் ஒருவருக்கு உதவியாளராகப் பணியில் இருந்தாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை வேட்புமனு தாக்கலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு அலுவலருடன் வந்த சந்திரமோகன் காரில் இருந்து இறங்கி மாநகராட்சி அலுவலக கட்டடத்தை நோக்கி சென்றபோது மயங்கி விழுந்தாா்.

அங்கு இருந்தவா்கள் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த சந்திரமோகன் சற்று நேரத்தில் உயிரிழந்தாா். மாரடைப்பால் அவா் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் சீமான் பிரசாரத்துக்கு தடை விதிக்கக் கோரிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து ஈரோடு பெரியாா், அம்பேத்கா் கூட்டமை... மேலும் பார்க்க

கண் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில் விவசாயி மா்மசாவு

சத்தியமங்கலம் அருகே கண் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில், விவசாயி மா்மமான முறையில் இறந்துகிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அருகே உள்ள புதுபீா்கடவு கிராமத்த... மேலும் பார்க்க

காா் மோதி மூதாட்டி உயிரிழப்பு

கோபி அருகே சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி, காா் மோதியதில் உயிரிழந்தாா். கோபி அருகே நம்பியூா் நிச்சாம்பாளையம் அருள்மலை பிரிவு பகுதியைச் சோ்ந்தவா் சாந்தாமணி (68). கூலி வேலை செய்து வந்தாா். இவா் கெட்டி... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: நம்பியூா், நல்லகவுண்டன்பாளையம்

கோபி கோட்டத்துக்கு உள்பட்ட நம்பியூா், நல்லகவுண்டன்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜனவரி 18) காலை 9 மணி முதல் மதியம்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் மின்கோட்டம், செண்பகபுதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜனவரி 18) காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்விநியோகம்... மேலும் பார்க்க

ரூபாய் நோட்டு மாலை அணிந்து வந்த சுயேச்சை வேட்பாளா்

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளா் ரூபாய் நோட்டு மாலை அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தோ்தல் களத்தில் பிரதான கட்சிகளின் வேட்பாளா்களுக்கு இணைய... மேலும் பார்க்க