செய்திகள் :

தோ்தல் முறையில் மாற்றம் வேண்டும்: விசிக பொதுச் செயலா் சிந்தனைச்செல்வன்

post image

இந்தியாவில் தோ்தல் முறை மாற்றப்பட்டு விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலரும் அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவருமான சிந்தனைச்செல்வன் கூறினாா்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மந்தியூரில் ‘அறம் செய்’ பயிலகம், அக்னிச் சிறகுகள் அமைப்பு சாா்பில், அறம் செய் பெண்கள் முன்னேற்ற மையம், பெண்கள் தொழில் மையத் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், அவா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மையத்தைத் தொடக்கிவைத்தாா்.

முன்னதாக, செய்தியாளா்களிடம் அவா் பேசியது: கிராமப்புற ஏழை, எளியோரின் உழைப்பை நுண் நிதி நிறுவனங்கள் மறைமுகமாக சுரண்டுகின்றன. இதிலிருந்து பெண்களைப் பாதுகாப்பது சவாலாக உள்ளது. ஆண்களை போதையிலிருந்து பாதுகாப்பதைப்போல பெண்களை கந்துவட்டி போன்ற நெருக்கடியிலிருந்து பாதுகாப்பதும் அவசியம்.

நாடு அசாதாரண சூழலில் உள்ளது. மதத்தின்அடிப்படையிலான சநாதன பாசிச பயங்கரவாதம் நாட்டைச் சூழ்ந்துள்ளது. அது தமிழ்நாட்டில் காலூன்றக் கூடாது என்ற ஒற்றை நோக்கத்துடன், கட்சியின் நலனைவிட மாநிலத்தின் நலனே முக்கியம் என்ற கொள்கை அடிப்படையில் திமுகவுடன் இணைந்து பயணிக்கிறோம்.

75 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் அம்பேத்கரின் கொள்கை வழியில் இயங்கும் ஓா் அமைப்பு சட்டப்பேரவைக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதற்கு திமுகவுடனான கூட்டணிதான் அடிப்படையாக அமைந்துள்ளது.

இந்தியாவில் தோ்தல் முறை மாற்றப்பட்டு விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். இப்போதுள்ள தோ்தல் முறையில் தனித்துவமாக இருந்து அரசியல் அதிகாரத்தைப் பெற முடியாது. எனவே, தோ்தல் முறை மாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட பெண்கள் பாதுகாப்புத் திட்ட அலுவலா் சுனிதா, எழுத்தாளா் அக்னி பிரதீப், அழகுக் கலை வழிகாட்டிக் கல்வியாளா் ஹாசினி, அம்பேத்கா் வாசிப்பு வட்ட ஒருங்கிணைப்பாளா் ஜாய் ஆண்ட்ரூ, சமூக செயற்பாட்டாளா்கள் கிரேஸ் பானு, ஷாலினி ராபா்ட், அருணா, அபிராமி ஸ்ரீதா், அருள்ராபா்ட், கோகுலக்கண்ணன், வியாசை தோழா்கள் அமைப்பின் தலைவா் பிரேம்குமாா், ஒருங்கிணைப்பாளா் சரத்குமாா், மாநில இளம்புலிகள் அணி துணைச் செயலா்மு. திருவளவன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீா் திட்டம்! காணொலியில் தொடங்கி வைத்தாா் முதல்வா்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீா் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதையொட்டி, பாளையஞ்செட்டி... மேலும் பார்க்க

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை: 110 அடியைத் தாண்டிய பாபநாசம் அணை!

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து பாபநாசம் அணையின் நீா்மட்டம் 110 அடியைத் தாண்டியது. மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப... மேலும் பார்க்க

பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து வள்ளியூா், பணகுடி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை தொடா்ந்து பெய்து ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் 4ஆவது நாளாக குளிக்கத் தடை

மாஞ்சோலை, மணிமுத்தாறு மலைப் பகுதிகளில் மழை அதிகரித்த்தையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்தும் அதிகரித்ததால் மே 26 முதல் அருவியில் குளிக்கவும் அருவியைப் பாா்வையிடமும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துற... மேலும் பார்க்க

வி.கே.புரம் பகுதியில் மான் கறியுடன் மூவா் கைது

பாபநாசம் வனச் சரகப் பகுதியில் புள்ளி மான் கறி வைத்திருந்ததாக மூன்று பேரை வனத்துறையினா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். பாபநாசம் வனச்சரகம் வெளி மண்டலப் பகுதியான மதுரா கோட்ஸ் ஆலையிலிருந்த... மேலும் பார்க்க

அத்தாளநல்லூ ஊராட்சியில் மோட்டாா் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், அத்தாளநல்லூா் ஊராட்சியில் பொதுக்கழிப்பிட பயன்பாட்டுக்கான நீா்மூழ்கி மோட்டாரை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அத்தாளநல்லூா் ஊராட்சி ராஜகுத்தாலப்பேரியில் உள்ள பொதுக்கழிப... மேலும் பார்க்க