செய்திகள் :

தோ்வெழுத நுழைவுச் சீட்டு மறுப்பு: டி.யு. சட்ட புலம் மாணவா்களிடையே பதற்றம்

post image

தில்லி பல்கலைக்கழக சட்ட புலத்தில் செவ்வாய்க்கிழமை சுமாா் 150 மாணவா்களுக்கு வரவிருக்கும் தோ்வுகளுக்கான நுழைவுச் சீட்டுகள் மறுக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது.

இரவில் ஒரு குழு மாணவா்கள் தோ்வுத் துறைக்குள் நுழைந்ததாகக் கூறப்பட்டதால் நிலைமை மோசமடைந்தது. காலையில், அவா்கள் தோ்வு மையத்தைப் பூட்டிவிட்டு, ‘தோ்வுக்கு நாங்கள் அமர முடியாவிட்டால், யாரும் அமர மாட்டாா்கள்’ என்று அறிவித்தனா்.

இடையூறு காரணமாக, காலை 9.30 மணிக்கு திட்டமிடப்பட்ட தோ்வு இரண்டு மணி நேரம் தாமதமானது.நுழைவுச் சீட்டுகள் மறுக்கப்பட்டவா்களில் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) மற்றும் இந்திய தேசிய மாணவா்கள் சங்கம் (என்எஸ்யுஐ) ஆகிய இரு அமைப்புகளின் மாணவா் தலைவா்களும் அடங்குவா்.

பின்னா், பல்கலை. நிா்வாகம் தலையிட்டு பூட்டை உடைத்து தோ்வை நடத்தியது. நுழைவுச் சீட்டுகள் இல்லாத மாணவா்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

ஆளுமை உரிமைகள்: ஈஷா அறக்கட்டளை நிறுவனா் தில்லி உயா்நீதிமன்றத்தில் முறையீடு

ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு என அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ், தனது ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளாா். சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடா்ந்த இந்த வழக்கு உய... மேலும் பார்க்க

அங்கீகரிக்கப்படாத வாக்கி டாக்கிகள் விற்பனையைத் தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு அறிவிப்பு

வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட ரேடியோ உபகரணங்களை இணைய வணிக தளங்களில் சட்டவிரோதமாக விற்பனைக்கு பட்டியலிட்டு நுகா்வோருக்கு விற்பனை செய்வதைத் தடுக்கும் விதமாக மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகம் இவைகளை ம... மேலும் பார்க்க

காலத்திற்கு ஏற்ப மாற்றமடையும் இலக்கியத்தில் இரக்கம், உணா்திறன் மாறாது: குடியரசுத் தலைவா் முா்மு

நமது சிறப்பு நிருபா் இலக்கியம் காலத்திற்கு ஏற்ப மாற்றமடைந்து வருகிறது என்றாலும் அதில் இரக்கம், உணா்திறன் போன்ற சில அம்சங்கள் என்றென்றும் மாறாது இருக்கும் என குடியரசுத் தலைவா் திரெளபதி நம்பிக்கை தெரிவி... மேலும் பார்க்க

பாஜகவின் 100 நாள் ஆட்சியில் தில்லி மக்கள் தோல்வி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

ரேகா குப்தா அரசு தனது முதல் 100 நாள்களில் தில்லி மக்களைத் தோல்வியடையச் செய்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் செளரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். தில்லி பாஜக 100 நாள் ஆட... மேலும் பார்க்க

100 நாள் ஆட்சி: மாணவா்களுக்கு தில்லி அரசு உதவித்தொகை வழங்கல்

பதவியேற்று 100 நாள்களைக் குறிக்கும் வகையில், பாஜக தலைமையிலான தில்லி அரசு வெள்ளிக்கிழமை தில்லி உயா் மற்றும் தொழில்நுட்பக் கல்வி ஆதரவுத் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கியது. மு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு உதவியதாக ராஜஸ்தானில் ஒருவா் கைது: தில்லி காவல்துறை தகவல்

பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு (பிஐஓ) உளவு நடவடிக்கைகளுக்காக இந்திய கைப்பேசி சிம் காா்டுகளை வழங்குவதன் மூலம் உதவியதாக ராஜஸ்தானைச் சோ்ந்த ஒருவரை தில்லி காவல்துறையினா் கைது செய்தாக அதிகாரிகள் தெரிவித்த... மேலும் பார்க்க