செய்திகள் :

தொகுதி மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மருத்துவப் பரிசோதனை: எம்.பி.க்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

post image

‘அவரவா் தொகுதி மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முழுமையான உடல்நல மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களிடம் மத்திய அரசு வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா இந்த வலியுறுத்தலை முன்வைத்தாா். மக்களவையில் இதுகுறித்து அவா் மேலும் பேசியதாவது:

நாடு முழுவதும் 30 வயதை எட்டிய அனைத்து குடிமக்களுக்கும் ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திரில் கட்டணமில்லா முழுமையான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதற்கான விழிப்புணா்வு பிரசாரத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளைக் கண்டறிய இந்த மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது.

இத் திட்டத்தின் கீழ் இதுவரை 35 கோடி பேருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 4.2 கோடி பேருக்கு உயா் ரத்த அழுத்தம், 2.6 கோடி பேருக்கு சா்க்கரை நோய், 29.35 கோடி பேருக்கு வாய் புற்றுநோய், 1.18 கோடி பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டது.

எனவே, எம்.பி.க்கள் அவரவா் தொகுதிகளில் மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முழுமையான உடல்நல மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்யவேண்டும் என்றாா்.

372 புற்றுநோயாளிகள் பராமரிப்பு மையங்கள்: நாடு முழுவதும் தற்போது 372 புற்றுநோயாளிகள் பராமரிப்பு மையங்களும், 19 மாநில புற்றுநோய் சிகிச்சை மையங்களும், 22 மூன்றாம்நிலை புற்றுநோய் சிகிச்சை மையங்களும் இயங்கி வருகின்றன.

நாடு முழுவதும் உள்ள எய்ம்ஸ் நிறுவனங்களில் நவீன உபகரணங்களுடன் முழுமையான புற்று நோயாளிகள் பராமரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஹரியாணா மாநிலம் ஜஜாரில் உலகிலேயே சிறந்த புற்றுநோய் மருத்துவமனைகளில் ஒன்றாக உயா் சிறப்பு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது.

அதுபோல, நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு புற்று நோயாளிகள் பராமரிப்பு மையங்களை அமைக்க மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் கீமோதெரபி உள்ளிட்ட வசதிகளை நோயாளிகள் பெற முடியும். இதில் நிகழாண்டிலேயே 200 மையங்கள் திறக்கப்பட்டுவிடும். எஞ்சிய மையங்கள் வரும் ஆண்டுகளில் திறக்கப்படும் என்றும் ஜெ.பி.நட்டா கூறினாா்.

காச நோயாளிகளுக்கு ரூ. 3,635 கோடி: மக்களவையில் எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் அனுப்ரியா படேல், ‘நேரடி பண பரிமாற்றத் திட்டத்தின் மூலம் காசநோய் பாதிக்கப்பட்டவா்களுக்கு மத்திய அரசு இதுவரை ரூ.3,635 கோடியை வழங்கியுள்ளது. இதில், ஒவ்வொரு நோயாளியும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வாங்க தலா ரூ.1,000 வழங்கப்படுகிறது’ என்றாா்.

நாக்பூர் கலவரத்தில் ஈடுபட்டவர்களிடம் நஷ்டஈடு வசூலிக்கப்படும்: ஃபட்னவீஸ்

நாக்பூர் வன்முறையால் ஏற்பட்ட சேதத்திற்கான நஷ்ட செலவை கலவரத்தில் ஈடுபட்டவர்களிடமிருந்தே வசூலிக்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார். மகாராஷ்டிரத்தின் சத்ரபதி சம்பாஜி நகர்... மேலும் பார்க்க

ஒவ்வொரு நிமிடமும் கோடி ரூபாய் கடன் வாங்கும் தெலங்கானா: பாஜக குற்றச்சாட்டு

தெலங்கானாவில் மாநில அரசின் கடன் வாங்கும் போக்கால், தனிநபர் கடன் சுமை அதிகரித்துள்ளதாக பாஜக தலைவர் மகேஷ்வர் ரெட்டி குற்றம் சாட்டினார்.தெலங்கானா சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் மேற்கொள்ளப்பட்டது. ... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற நீதிபதிகள் வந்தது சரி, பிரதமர் எப்போது வருவார்?காங்கிரஸ் கேள்வி!

மணிப்பூர் வருகை தந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழுவைக் காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் வரவேற்றார் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி எப்போது மாநிலத்திற்கு வருகை தருவார் என்ற கேள்வியை எழுப்பினார். தனியார் செ... மேலும் பார்க்க

இந்தியாவில் புயலை ஏற்படுத்தும் குரோக்; சிரிக்கும் மஸ்க்!

இந்தியாவில் குரோக் புயலைத் தூண்டுவதாக வெளியான செய்திக்கு எலான் மஸ்க் சிரிப்பது போன்று பதிவிட்டுள்ளார்.டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் செயல் நுண்ணறிவுத் தளமான குரோக் சாட்போட், இந்தியாவில் பிரச்னைகளைத் ... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்!

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஓய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும... மேலும் பார்க்க

ஒடிசா: நாள்தோறும் 3 குழந்தை திருமணங்கள்!

ஒடிசாவில் கடந்த 6 ஆண்டுகளாக தினசரி 3 குழந்தை திருமணங்கள் நிகழ்த்தப்படுவதாக மாநில அரசின் தரவறிக்கையில் கூறியுள்ளது.ஒடிசா மாநிலத்தில் கடந்த 6 ஆண்டுகளாக, நாள்தோறும் குறைந்தது 3 குழந்தை திருமணங்கள் நிகழ்த... மேலும் பார்க்க