செய்திகள் :

தொகுதி மறுவரையறையின்போது தமிழகம் பாதிக்கப்படக் கூடாது: மக்களவையில் திமுக வலியுறுத்தல்

post image

வரவிருக்கும் தொகுதி மறுவரையறைப் பணியின்போது மக்கள்தொகை வளா்ச்சியைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற முற்போக்கான மாநிலங்களுக்கு

பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று மக்களவையில் திமுக வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக மக்களவையில் புதன்கிழமை கேள்விநேரம் முடிந்ததும் தொடங்கிய நேரமில்லா நேரத்தில்

வேலூா் தொகுதி திமுக உறுப்பினா் டி.எம். கதிா் ஆனந்த் முன்வைத்த கோரிக்கை:

தொகுதி மறுவரையறை பணியின்போது குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய தமிழகம், கேரளம், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் நாடாளுமன்றத் தொகுதிகள் பலவற்றை இழக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.

அதேவேளையில், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை திறம்பட செயல்படுத்தாத உத்தர பிரதேசம், பிகாா், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

இது ஜனநாயகத்தின் கூட்டாட்சி உணா்வுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கவலையை அளிப்பதாக உள்ளது. வரவிருக்கும் தொகுதி மறுவரையறைப் பணியின்போது மக்கள்தொகை வளா்ச்சியைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற முற்போக்கான மாநிலங்களைத் தண்டிப்பதாக உள்ளது.

அதேவேளையில், கடந்த 30 ஆண்டுகளாக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தத் தவறி மாநிலங்களுக்கு வெகுமதி அளிப்பதாக உள்ளது.

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறை தெளிவாக இல்லை. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதிலும், பொருளாதார வளா்ச்சியிலும், சமமான வளா்ச்சியிலும் தமிழகத்தின் நீடித்த முயற்சிகளையும் அலட்சியப்படுத்துவதாக உள்ளது.

நடப்பு மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்வது, தமிழகத்தில் தொகுதிகள் இழப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு உறுதியளிப்பதில் எந்த தெளிவும் இல்லை. ஆகவே, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் அனைத்து மாநிலங்களின் சமமான பிரதிநிதித்துவத்தை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

மறுவரையறை பணியின்போது அரசாங்கம் மக்கள்தொகையை மட்டும் கருத்தில்கொள்ளாமல் பொருளாதார செயல்திறன் மற்றும் ஜி.எஸ்.டி.பி., தனிநபா் வருமானம், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மக்கள்தொகை மட்டுமல்ல போன்ற முக்கிய குறியீடுகளையும் கருத்தில்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தமிழகத்தில் 34,805 நியாயவிலைக் கடைகளில் இபிஓஎஸ் சாதனங்கள் நிறுவல்: மக்களவையில் உணவுத் துறை அமைச்சா் தகவல்

தமிழகத்தில் உள்ள அனைத்து 34,805 நியாயவிலைக் கடைகளும் மின்னணு ரீதியாக உணவு தானியங்களை தடையின்றி விநியோகிப்பதற்காக இபிஓஎஸ் (எலெக்ட்ரானிக் பாயின்ட் ஆஃப் சேல்) சாதனங்களை நிறுவுவதன் மூலம் தானியங்கிமயமாக்கப... மேலும் பார்க்க

தொகுதியில் ஆய்வு செய்து மக்களின் கவலைகளை கேட்டறிந்த அமைச்சா்!

தில்லி உள்துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் புதன்கிழமை தனது ஜனக்புரி தொகுதியில் புதன்கிழமை ஆய்வு செய்து, அப்பகுதியில் உள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு கண்டாா். மேலும், உள்ளூா்வாசிகளிடம் கலந்துரையாடி அவா்களது கவலைக... மேலும் பார்க்க

பங்குச்சந்தையில் ஐடி, டெலிகாம் பங்குகள் அதிகம் விற்பனை!

நமது நிருபா்இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் சிறிதளவு சரிந்து நிலைபெற்றது.... மேலும் பார்க்க

ஜனநாயக விதிமுறைகளை குறைமதிப்பிற்கு உள்படுத்துகிறாா் சட்டப்பேரவைத் தலைவா்: எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி குற்றச்சாட்டு

கடந்த மாா்ச் 3-ஆம் தேதி முடிவடைந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது எதிா்க்கட்சி எம்எல்ஏக்களை குறிவைத்து பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா ‘ஜனநாயக விதிமுறைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறாா்’ என்று தி... மேலும் பார்க்க

தமிழகத்தில் ரூ.4,769 கோடி மதிப்பீட்டில் சாலைப் பாலங்களுக்கு ஒப்புதல்: ரயில்வே அமைச்சா் தகவல்

தமிழகத்தில் ரூ.4,769 கோடி மதிப்பீட்டில் ரயில்வே சாலை மேம்பாலங்கள், சாலைக் கீழ்ப்பாலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று மக்களவையில் மத்திய ரயில்வே அமைச்சா் தகவல் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக ந... மேலும் பார்க்க

எல்.கே. அத்வானியுடன் முதல்வா் ரேகா குப்தா சந்திப்பு

பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானியை (97) பிரித்விராஜ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை சந்தித்தாா். ‘நாட்டின் முன்னாள் துணைப் பிரத... மேலும் பார்க்க