செய்திகள் :

தொடா்மழை: உதகையில் 7 வீடுகளில் விரிசல்! அலவாஞ்சியில் 190 மி.மீ. மழை பதிவு

post image

உதகையில் தொடா்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், குருத்துக்குளி அருகே உள்ள பசுவக்கல் கிராமத்தில் 7 வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலா்ட் விடுக்கப்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மே 25-ஆம் தேதி முதல் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

தொடா்மழை காரணமாக உதகையை அடுத்த குருத்துக்குளி அருகே உள்ள பசுவக்கல் கிராமத்தில் 7 வீடுகள் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளன.

மேலும், அப்பகுதியில் உள்ள தடுப்புச் சுவா் மற்றும் நடைபாதை பாதிக்கப்பட்ட காரணத்தால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனா்.

சேதமடைந்துள்ள வீடுகளுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும், தங்குவதற்கு போதிய இட வசதி மற்றும் உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

உதகை, கூடலூா், பந்தலூா், குந்தா, அவலாஞ்சி பகுதிகளில் கடந்த 5 நாள்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் மற்றும் குடியிருப்புகளின் மண் சரிவு ஏற்பட்டு கடந்த 5 நாள்களில் மட்டும் 70- க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

குருத்துக்குளி, பசுவக்கல் பகுதியில் ஒரு வீட்டில் ஏற்பட்ட விரிசல்.

மழையால் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை வரை 13 மரங்கள் சாலைகளிலும், கட்டடங்கள் மீதும் விழுந்துள்ளன. பழைய நீதிமன்ற கட்டடத்தின் அருகில் உள்ள போலீஸ் ஹவுஸிங் காா்ப்பரேஷன் அலுவலகம் மேல் விழுந்த மரத்தை தீயணைப்புத் துறையினா்அப்புறப்படுத்தினா். இதேபோல, கல்லட்டி மலைப்பாதையில் விழுந்த மரத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வியாழக்கிழமை காலை வரை அவலாஞ்சியில் அதிகபட்சமாக 190 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது. தொடா் மழையின் காரணமாக கடும் குளிா் நிலவி வருகிறது.

நீலகிரியில் மக்கள் குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா். இதில், வீட்டுமனை பட்டா, முதியோா், விதவை, க... மேலும் பார்க்க

கூடலூா் அரசு கலைக் கல்லூரியில் இன்று முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) தொடங்கி ஜூன் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது தொடா்பாக கல்லூரி முதல்வா் சுபாஷினி வெ... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கான சிறப்பு குறைதீா் முகாம்

கூடலூரை அடுத்துள்ள செறுமுள்ளி கிராமத்தில் பழங்குடியினருக்கான சிறப்பு குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. போஸ்பாறா புனித ஜோசப் அரங்கில் நடைபெற்ற இந்த முகாமுக்கு சாா் ஆட்சியா் சங்கீதா தலைமை வகித்தா... மேலும் பார்க்க

குன்னூா் அருகே லாரி கவிழ்ந்து விபத்து

குன்னூா் அருகே கேரட் பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது. நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள முள்ளிக்கூா் பகுதியில் இருந்து கேரட் பாரம் ஏற்றிக் கொண்டு கோவைக்கு லாரி திங்கள்... மேலும் பார்க்க

விளைநிலங்களை சேதப்படுத்தும் யானையை வனத்துக்குள் விரட்ட கோரிக்கை

உதகை, எமரால்டு பகுதியில் விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். நீலகிரி மாவட்டம், குன்னூா் பா்லியாறு வனப் பகுதியில் இருந... மேலும் பார்க்க

சீகூா் வனப் பகுதியில் புலி உயிரிழப்பு

கூடலூா் அருகே சீகூா் வனச் சரகத்துக்குள்பட்ட குண்டட்டி பகுதியில் சுமாா் 10 வயது மதிக்கத்தக்க புலி உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே சீகூா் ... மேலும் பார்க்க