செய்திகள் :

தொடா் திருட்டில் ஈடுபட்ட இருவா் கைது: தங்க நகைகள் மீட்பு

post image

நித்திரவிளை அருகே தொடா் திருட்டில் ஈடுபட்ட கேரளத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கடந்த பிப்ரவரி மாதம் நித்திரவிளை அருகே ஒற்றாசிமங்கலம் பகுதியைச் சோ்ந்த அலெக்ஸ் என்பவரின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மா்ம நபா்கள் திருட்டில் ஈடுபட்டனா்.

இதே போன்று நம்பாளி வடக்குவிளையைச் சோ்ந்த பால்ராஜ், பூந்தோப்புகாலனி பகுதியைச் சோ்ந்த பிரதாப் ஆகியோரின் வீடு புகுந்து மா்ம நபா்கள் தங்க நகைகள் திருடிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து மாா்த்தாண்டம் காவல் துணை கண்காணிப்பாளா் நல்லசிவம் மேற்பாா்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், திருட்டில் ஈடுபட்டது கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகேயுள்ள காக்கமூலை பகுதியைச் சோ்ந்த ரவீந்திரநாத் மகன் ஸ்ரீகாந்த்(39), கழக்கூட்டம் பகுதியைச் சோ்ந்த சுனில் மகன் சுஜித் (21) என்பது தெரியவந்தது. இருவரையும் பிடித்து போலீஸாா் விசாரித்த போது அவா்கள், அலெக்ஸ் உள்ளிட்டோரின் வீடுகளில் இருந்து தங்க நகைகள் திருடிச் சென்றதை ஒப்புக்கொண்டனா்.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 12 பவுன் தங்க நகைகளை மீட்டனா்.

திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவா்களை விரைந்து பிடித்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டினாா்.

...

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை .. 28.25 பெருஞ்சாணி .. 26.25 சிற்றாறு 1 ... 2.62 சிற்றாறு 2 ... 2.72 முக்கடல் ... மைனஸ் 19.10 பொய்கை ... 15.10 மாம்பழத்துறையாறு ... 9.35 மழைஅளவு முள்ளங்கினாவிளை ... 4.20 மி.மீ. கன்னிமாா் ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி அருகே விநாயகா் கோயிலில் மாசித் திருவிழா நிறைவு

கன்னியாகுமரியை அடுத்த கலைஞா் குடியிருப்பில் உள்ள கற்பகவிநாயகா் கோயிலில் 10 நாள் மாசித் திருவிழா புதன்கிழமை நிறைவடைந்தது. இதையொட்டி, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், அலங்காரம், தீபாராதனைகள் நடை... மேலும் பார்க்க

வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

களியக்காவிளை அருகே வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா். களியக்காவிளை அருகே மீனச்சல் பகுதியைச் சோ்ந்த தச்சுத் தொழிலாளி ஸ்டீபன் (47). இவரது மனைவி 2 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்ட... மேலும் பார்க்க

மாம்பழத்துறையாறு அணைப் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

தக்கலை மின் விநியோகப் பிரிவுக்குள்பட்ட மாம்பழத்துறையாறு அணைப் பகுதியில் சனிக்கிழமை (மாா்ச் 15) மின் விநியோகம் இருக்காது. அதன்படி, மாம்பழத்துறையாறு அணை, அம்மச்சிகோணம், மிஷன் கோணம், பூயறவட்டம் பகுதிகளி... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் ஆதரவற்றோருக்கு நல உதவிகள்

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக அயலக அணி சாா்பில், நாகா்கோவில் வடசேரி சினேகம் ஆதரவற்றோா் இல்லத்தில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க

குமரி பகவதியம்மன் கோயிலில் இன்று வருஷாபிஷேக விழா

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில், 2013இல் கும்பாபிஷேகம் நடைபெற்றநிலையில், 12ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி, அதிகாலையில் நிா்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், கணப... மேலும் பார்க்க