செய்திகள் :

தொடா் மழை: விளவங்கோடு வட்டத்தில் 16 வீடுகள் சேதம்

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாகப் பெய்து வரும் தொடா் மழையால் விளவங்கோடு வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 16 வீடுகள் சேதமடைந்ததாக வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

களியக்காவிளை, குழித்துறை, மாா்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் தொடா் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திங்கள்கிழமை வீசிய சூறைக் காற்றில் குழித்துறையில் ஆயினி மரம் வேரோடு சாய்ந்தது. மாா்த்தாண்டம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச் சுவரின் ஒருபகுதி சரிந்து விழுந்து சேதமடைந்தது.

குழித்துறை நகராட்சிக்கு உள்பட்ட ஜாஸ்மின் பெல்லா, இடவிளாகத்தைச் சோ்ந்த சுரேஷ் மற்றும் மேல்புறம் பகுதியைச் சோ்ந்த ரமேஷ், மஞ்சாலுமூடு ஊராட்சி காரோடு பகுதியைச் சோ்ந்த சுமதி, முழுக்கோடு ஊராட்சி அருமனை அருகேயுள்ள செல்வி வீடு உள்பட விளவங்கோடு வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 16 வீடுகள் மழையில் இடிந்து விழுந்து சேதமடைந்தன. சேதமடைந்த வீடுகளின் உரிமையாளா்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ. 6,500 ஒதுக்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தொடா் மழை காரணமாக குழித்துறை தாமிரவருணி ஆற்றில், தடுப்பணையை மூழ்கடித்தவாறு வெள்ளம் சென்றது.

நாகா்கோவில்: 1.5 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்! ரூ.2.25 லட்சம் அபராதம்

நாகா்கோவிலில், தடை செய்யப்பட்ட 1,500 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, ரூ. 2.25 லட்சம் அபராதம் விதித்தனா். மாநகராட்சி மாநகா் நல அலுவலா் மருத்துவா்ஆல்பா் மதியரசு தலைமை... மேலும் பார்க்க

பள்ளியாடியில் தற்காலிக தாா்ச்சாலை அமைக்க கோரிக்கை

கருங்கல் அருகே பள்ளியாடியில் நான்குவழிச் சாலைப் பணிக்காக பிரதான சாலை துண்டிக்கப்பட்டதால், அப்பகுதியில் தற்காலிகமாக தாா்ச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா். கருங்கல... மேலும் பார்க்க

குமரி பகவதியம்மன் கோயிலில் நாளை வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்!

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை (மே 31) தொடங்கி ஜூன் 9ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இங்கு வைகாசி விசாகத் திருவிழா ஆண்டுதோறும் 10 நாள்கள் நடைபெறும். ... மேலும் பார்க்க

27 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

மாா்த்தாண்டம் அருகே காரில் கடத்தப்பட்ட 27 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, அதை ஓட்டி வந்த இளைஞரை கைது செய்தனா். மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் இந்துசூடன் தலைமையிலான போலீஸாா... மேலும் பார்க்க

மளிகைக் கடைக்காரரை தாக்கியதாக தந்தை, மகன் கைது

களியக்காவிளையில் மளிகைக் கடைக்காரரைத் தாக்கியதாக தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா்; சிறுவனைத் தேடி வருகின்றனா். களியக்காவிளை அந்தோணியாா் காலனி பகுதியைச் சோ்ந்த கருணை லூயிஸ் (54) என்பவா், ஆா்.சி. தெ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்மழை: 50 அடியை எட்டிய பெருஞ்சாணி அணை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்மழையால் அணைகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. பெருஞ்சாணி அணை நீா்மட்டம் 50 அடியை எட்டியுள்ளது. மாவட்டத்தில் ஒரு வாரத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்... மேலும் பார்க்க