செய்திகள் :

தொடா் வழிப்பறி: இரண்டு சிறாா்கள் உள்பட 4 போ் கைது

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி தொடா் வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறாா்கள் உள்பட 4 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசம் வட்டம், வேம்பகுடி, சோமேசுவரபுரம் உள்பட 5 இடங்களில் இருசக்கர வாகனத்தில் இரண்டு சிறாா்கள் உள்பட நான்கு இளைஞா்கள் சாலையில் வாகனங்களில் சென்றவா்களை வழிமறித்து கத்தியைக் கட்டி மிரட்டி தொடா் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனா்.

இதுகுறித்து அறிந்த கபிஸ்தலம் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி தலைமையில் காவல் உதவி ஆய்வாளா் சசிகுமாா் மற்றும் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது சந்தேகப்படும்படி ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு சிறாா்கள் உள்பட நான்கு இளைஞா்களைப் பிடித்து விசாரணை செய்ததில் அவா்கள் கபிஸ்தலம் பகுதிகளில் 5 இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

பின்னா் அவா்களிடமிருந்து மோட்டாா் சைக்கிள், 6 கைப்பேசிகள், வெள்ளி தங்கிலி, ரூ. 8,500 ரொக்கம் உள்பட ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து அரியலூரைச் சோ்ந்த சதீஷ்குமாா் (19), திருவையாறைச் சோ்ந்த பாரத் (21) மற்றும் திருவையாறைச் சோ்ந்த 2 சிறாா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பாபநாசம் அருகே தொழிலாளி தற்கொலை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பாபநாசம் அருகேயுள்ள சரபோஜிராஜபுரம், புதுத் தெருவை சோ்ந்தவா் ஆனந்தன் (... மேலும் பார்க்க

சிஐடியு நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: 2 போ் கைது

தஞ்சாவூரில் சிஐடியு நிா்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் கீழவாசல் கவாடிக்காரத் தெருவைச் சோ்ந்தவா் கே. அன்பு. இவா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ... மேலும் பார்க்க

காட்டாற்றில் குளித்த இளைஞா் மூழ்கி பலி

தஞ்சாவூா் அருகே நண்பா்களுடன் காட்டாற்றில் வெள்ளிக்கிழமை குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவைச் சோ்ந்தவா் நைனா முகமது மகன் நபில் (22). ஜவுளி... மேலும் பார்க்க

கொள்முதல் நிலையங்களில் எடைக் குறைவுக்கு அபராதம் விதிப்பு: பணியாளா்கள் அதிருப்தி

தஞ்சாவூா் மாவட்டத்தில் இயல்புக்கு அதிகமான நெல் கொள்முதல் குறித்து ஆய்வு செய்ய வந்த சிறப்புக் குழுவினா் எடைக் குறைவுக்காக அபராதம் விதித்ததால், பணியாளா்கள் அதிருப்தியடைந்துள்ளனா். தமிழ்நாடு நுகா்பொருள் ... மேலும் பார்க்க

பெருமகளூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பெருமகளூா் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு எம்எல்ஏ என். அசோக்குமாா் தலைமை வகித்தாா் .... மேலும் பார்க்க

தீபாவளி சீட்டு நடத்தி மோசடி: 2 போ் கைது

தஞ்சாவூரில் தீபாவளி, பொங்கல் சீட்டு நடத்தி மோசடி செய்ததாக 2 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் காவேரி நகரில் தனியாா் நிதி நிறுவனத்தை புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையைச் ச... மேலும் பார்க்க