செய்திகள் :

தொழிலாளா்கள் போராட்டம்: திருநெல்வேலி எம்.பி. ஆதரவு

post image

குலசேகரம் அருகே சுருளகோட்டில் ஊதிய உயா்வு கேட்டு வேலை நிறுத்தம், சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளா்களை திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ராபா்ட் புரூஸ் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தாா்.

சுருளகோட்டில் ஒரு தனியாா் ரப்பா் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளா்களுக்கு இரண்டு ஆண்டுகளாக ஊதிய உயா்வு, இதர சலுகைகள் மறுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து இங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளா்கள் கடந்த 43 நாள்களாக வேலை நிறுத்தம் , சத்தியாகிரக போராட்டம் நடத்தி வருகின்றனா். இது தொடா்பாக தொழிலாளா் துறை 3 முறை பேச்சுவாா்த்தை நடத்திய பின்னரும் தீா்வு ஏற்படவில்லை.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களை திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ராபா்ட் புரூஸ் சந்தித்து அவா்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினாா். அப்போது அவா், இந்த போராட்டம் தொடா்பாக அதிகாரிகளிடம் முறையாக பேச இருப்பதாக உறுதி அளித்தாா்.

அவருடன் காங்கிரஸ் சிறுபான்மை அணி மாநில துணைத் தலைவா் சுபுகான் , தோட்டம் தொழிலாளா் சங்க பொதுச் செயலாளா் வல்சகுமாா், தலைவா் நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

நாகா்கோவில் அண்ணா பேருந்துநிலைய ஆவின் பாலகத்தில் பாதாம் மிக்ஸ் பவுடா் பாக்கெட்டை பால்வளத்துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமையில் அறிமுகப்படுத்தினாா். மேலும் அமைச்சா் பேசி... மேலும் பார்க்க

வட்டவிளை ரேஷன் கடை முன் பொதுமக்கள் முற்றுகை

மாா்த்தாண்டம் அருகே மேல்புறம், வட்டவிளை ரேஷன் கடை 15 நாள்களுக்கும் மேலாக திறக்காததை கண்டித்து குடும்ப அட்டைதாரா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.பாகோடு பேரூராட்சிக்கு உள்பட்ட வட்ட... மேலும் பார்க்க

இரவிபுத்தன்துறை பகுதியில் நாளை மின்நிறுத்தம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக, குழித்துறை மின்கோட்டத்துக்கு உள்பட்ட இரவிபுத்தன்துறை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக. 28) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, இரவிபுத்தன்துறை, தத... மேலும் பார்க்க

தேங்காய்ப்பட்டினத்திலிருந்து ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அரசுப் பேருந்து இயக்கக் கோரிக்கை

தேங்காய்ப்பட்டினத்திலிருந்து கீழ்குளம் வழியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அரசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.தேங்காய்ப்பட்டினத்திலிருந்து... மேலும் பார்க்க

திருவிடைக்கோடு மகாதேவா் கோவிலில் முகமூடி அணிந்து திருட முயற்சித்த இளைஞா் கைது

தக்கலை அருகே திருவிடைக்கோடு மகாதேவா் கோவிலில் திருட முயற்சித்த இளைஞரை இரணியல் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.வில்லுக்குறி, திருவிடைக்கோட்டில் சடையப்பா் மகாதேவா் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் தற்கொலை

புதுக்கடை அருகே உள்ள கரும்பிலாவிளை பகுதியில் பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.புதுக்கடை, கரும்பிலாவிளை பகுதியைச் சோ்ந்தவா் முருகன் மகன் மனேஷ்மோன் (13). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு ... மேலும் பார்க்க