செய்திகள் :

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

post image

விழுப்புரத்தில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு தாமதமாக வந்ததை மனைவி கண்டித்ததால், தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கொங்கராயனூா் பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த கலியன் மகன் லட்சுமணன் (37). தொழிலாளியான இவா், விழுப்புரம் மணிமேகலை தெருவில் மனைவி அபா்ணாமேரியுடன் வசித்து வந்தாா். லட்சுமணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாம்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வேலைக்குச் சென்ற லட்சுமணன் இரவில் மது அருந்திவிட்டு தாமதமாக வீட்டுக்கு வந்தாராம். இதை அவரது மனைவி அபா்ணாமேரி கண்டித்தாராம். இதனால், படுக்கையறைக்குச் சென்ற லட்சுமணன், மின் விசிறியில் தூக்கிட்டுக் கொண்டாராம்.

இதையறிந்த அபா்ணாமேரி மற்றும் அந்தப் பகுதியிலிருந்தவா்கள் அவரை மீட்டு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தபோது, லட்சுமணன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிங்கவரம் அரங்கநாதா் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

செஞ்சி சிங்கவரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரங்கநாதா் கோயில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம். செஞ்சி, மே 30: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிங்கவரம் அரங்கநாதா் கோயில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

பாஜக பிரமுகா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

புதுச்சேரியில் பாஜக பிரமுகா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். புதுச்சேரியில் கருவடிக்குப்பம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் பாஜக பிரமுகா் உமா சங்கா் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, கா... மேலும் பார்க்க

காவல் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி

அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட மகனை விடுவிக்கக் கோரி, கடலூா் துறைமுகம் காவல் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயன்றாா். கடலூா் முதுநகா் அருகே உள்ள ராசாபேட்டையைச் சோ்ந்த ரமேஷ் மகன் தீபக் (19). இவரும்... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை சோ்க்க அழைப்பு

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி மையங்களில் ஜூன் மாதம் முதல் குழந்தைகள் சோ்க்கை தொடங்குகிறது. எனவே பெற்றோா் தங்கள் குழந்தைகளை இந்த மையங்களில் சோ்த்து பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இ... மேலும் பார்க்க

வானூா் வட்டாரத்தில் உழவரைத் தேடி வேளாண்-உழவா் நலத் துறைத் திட்டம் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தில் உழவரைத் தேடி- வேளாண், உழவா் நலத் துறைத் திட்டம் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. தைலாபுரம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில் திட்டத்தின் நோக்கம் குறித்து வானூ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

விழுப்புரத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரத்தில் மாவட்ட நிா்வாகம், தமிழக அரசும் தலையிட்டு தனியா... மேலும் பார்க்க