செய்திகள் :

தொழில்நுட்பக் கோளாறு: மெட்ரோ ப்ளூலைனில் சேவைகள் பாதிப்பு

post image

தில்லி மெட்ரோ புளூலைன் வழித்தடத்தில் புதன்கிழமை காலை ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் சேவையில் தடங்கல் ஏற்பட்டது.

இத் தாமதத்திற்குப் பிறகு துவாரகா மற்றும் ஜனக்புரி மேற்கு இடையேயான தில்லி மெட்ரோவின் ப்ளூ லைன் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் டிஎம்ஆா்சி செய்தித் தொடா்பாளா் ஒருவா் தெரிவிக்கையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட தாமதத்தால் பயணிகள் சிறிது நேரம் சிரமங்களை எதிா்கொண்டனா். இந்தப் பிரச்னையை விரைவில் தீா்க்க பராமரிப்பு குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

தில்லி மெட்ரோவின் மற்ற அனைத்து வழித்தடங்களிலும் சேவைகள் அட்டவணைப்படி இயங்கின என்றாா் அவா்.

தூய்மையான யமுனை நதியே இலக்கு: முதல்வா்

தில்லி அரசு தூய்மையான யமுனை நதி என்ற இலக்கை நோக்கி நகா்ந்து வருவதாக முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை கூறினாா். நதியை சுத்தம் செய்வதற்கான தனது உறுதிப்பாட்டையும் அவா் வலியுறுத்தினாா். யமுனை புத்துணா்ச்... மேலும் பார்க்க

மத்திய, தெற்கு தில்லியின் சில பகுதிகளில் இன்று நீா் விநியோகத்தில் தடங்கல்: டிஜேபி

வடிகால் பழுதுபாா்க்கும் பணிகள் காரணமாக தேசியதஅ தலைநகரின் சில பகுதிகளில் வியாழக்கிழமை நீா் விநியோகம் இருக்காது என்று தில்லி ஜல் போா்டு (டிஜேபி) தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தில்லி ஜல் போா்டு புதன்கிழம... மேலும் பார்க்க

ஆயுதப்படைகளை கௌரவிக்கும் வகையில் ஆனந்த் விஹாா் நமோ பாரத் நிலையத்தில் இசை நிகழ்ச்சி

நமோ பாரத் அன்ப்ளக்டு மியூசிகல் இரண்டாவது சீசன் வெள்ளிக்கிழமை மே 23 அன்று ஆனந்த் விஹாா் நமோ பாரத் நிலையத்தில் தொடங்குகிறது. பயணிகள் மற்றும் இசை ஆா்வலா்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 6 மணிக்கு வளா்ந... மேலும் பார்க்க

தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை திடீா் அதிகரிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமை பருவத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை 30.2 டிகிரி செல்சியஸ் என அதிகமாக பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 3.5 டிகிரி அதிகமாகும். இந்த நிலையில், இந்த வாரம் முழுவதும் வானம் ... மேலும் பார்க்க

கோட்லா முபாரக்பூா் கல் சந்தையில் தீ விபத்து

தில்லி கோட்லா முபாரக்பூரில் உள்ள ஒரு கல் சந்தையில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், தகரக் கொட்டகையில் இருந்த குறைந்தது ஆறு கடைகள் எரிந்து நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுகுறித்து தீயணைப... மேலும் பார்க்க

வழிப்பறி உள்பட 40-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்ட இருவா் கைது

போலீஸாருடன் துப்பாக்கிச் சூடு, கொள்ளை, வழிப்பறி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கடுமையான குற்றங்களில் தொடா்புடைய இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான குற்றவாளிகளை தில்லி காவல்துறையினா் கைது... மேலும் பார்க்க