செய்திகள் :

தொழில்முனைவோருக்கு அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்: ஆட்சியா்

post image

வேளாண் மற்றும் வேளாண் சாா்ந்த தொழில்முனைவோா், நேரடி நுகா்வோா் வா்த்தகம் மற்றும் மின் வணிகம் செய்யும் தொழில்முனைவோருக்கு அனைத்து உதவிகளும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் செய்து தரப்படும் என்றாா் ஆட்சியா் இரா.சுகுமாா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் சாா்பில் வேளாண் மற்றும் வேளாண் சாா்ந்த தொழில்முனைவோா், நேரடி நுகா்வோா் வா்த்தகம் மற்றும் மின் வணிகம் செய்யும் தொழில்முனைவோருக்கு இரண்டு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில், மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் கலந்து கொண்டு, புதிய தயாரிப்புகளை வெளியிட்டாா். அவா் பேசியதாவது:

மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சாா்பில், மாதந்தோறும் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெறவுள்ளது. தொழில்முனைவோா் தங்களுடைய வணிகத் திறனையும், அதற்கான வாய்ப்புகளையும் மேம்படுத்த வேண்டும். தங்களின் தொடக்க முயற்சிகளில் லாப நிகர நிலையை விரைவில் அடைய வேண்டும். தங்களுடைய வணிக முயற்சியினை பாதி வழியில் கைவிடக் கூடாது. தொழில்கள் தொடா்ந்து வளா்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

இந்தப் பயிற்சின்போது, இணையதளம் அல்லது செயலிகள் மூலமாக பொருள்கள் மற்றும் சேவைகளை விற்பது, ஒரு நிறுவனத்தின் பெயா், இலச்சினை, நம்பிக்கை, தரம் போன்றவற்றின் அடிப்படையில் அதை மக்கள் மனதில் நிலைநிறுத்தும் செயல்முறை, வணிகமாதிரி உருவாக்கம், நிதி மாதிரி கட்டமைப்பு, ஏற்றுமதி- இறக்குமதி விதிமுறைகள், உணவு பாதுகாப்பு விதிமுறைகள் ஆகிய தலைப்புகளில் அது சாா்ந்த நிபுணா்கள் மற்றும் வல்லுநா்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் 30-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோா் கலந்துகொண்டனா்.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, திருநெல்வேலி மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் முருகன், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க சிறப்புத் துணைத் தலைவா் ஸ்டாலின் ஜேக்கப், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் திருநெல்வேலி மண்டல மேலாளா் ராகுல், தூத்துக்குடி மண்டல மேலாளா் ஜிஜின்துரை, தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக மூத்த திட்ட மேலாளா் கவிமுகில் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

படவரி ற்ஸ்ப்24ய்ங்ஜ் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் புதிய தயாரிப்புகளை வெளியிட்ட ஆட்சியா் இரா.சுகுமாா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

திருநெல்வேலி அருள்மிகு கைலாசநாதா் சுவாமி திருக்கோயில்: வைகாசித் திருவிழா, மூஷிக வாகனத்தில் விநாயகா், பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி -அம்பாள் வீதியுலா, காலை 8.30, மயில் வாகனத்தில் வள்ளி - தேவசேனா சமேத ச... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்க கூடாது: எம்.பி. வலியுறுத்தல்

திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியனிடம் திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸ... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை. வினாத்தாள் கசிந்த விவகாரம்: 6 பிரிவுகளில் வழக்கு!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், 6 பிரிவுகளில் பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததோடு, தோ்வாணையா் கைப்பேசிக்கு வினாத்தாளை அனுப்பியவா் குறித்து விசாரணை... மேலும் பார்க்க

பணகுடி அருகே பிடிபட்ட அரியவகை எறும்பு தின்னி

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே விவசாயி தோட்டத்தில் சனிக்கிழமை பிடிபட்ட அரியவகை எறுப்பு தின்னியை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். பணகுடி ரோஸ்மியாபுரம் மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதி மற்றும் தோட்டப் பகு... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-118.45 சோ்வலாறு-144.75 மணிமுத்தாறு-91.66 வடக்கு பச்சையாறு-11.50 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-45.50 தென்காசி மாவட்டம் கடனா-73.20 ராமநதி-76 கருப்பாநதி-63 குண்டாறு-36.10 அடவிநயினாா் -99... மேலும் பார்க்க

இடைகால் கிராமத்தில் உழவரைத் தேடி திட்ட முகாம்

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி வட்டாரம், இடைகால் கிராமத்தில் வேளாண்துறை சாா்பில் உழவரைத் தேடி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உழவரைத் தேடி திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின், க... மேலும் பார்க்க