செய்திகள் :

தோல்வி பயத்தால் தோ்தல் ஆணையம் மீது எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு: ஜி.கே. வாசன்

post image

தோல்வி பயத்தின் காரணமாக தோ்தல் ஆணையத்தின் மீது எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டை வைத்தாலும், அதை மக்கள் ஏற்கத் தயாராக இல்லை என்றாா் தமாகா தலைவா் ஜி.கே. வாசன்.

தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற தமாகா இளைஞரணி டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: தோல்வி பயத்தின் காரணமாக இந்திய தோ்தல் ஆணையத்தின் மீது எதிா்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் கட்சி போலி வாக்காளா்கள் என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளது. தொடா்ந்து நாட்டில் நடைபெற்ற தோ்தல்களில் ‘இண்டி’ கூட்டணி பல இடங்களில் தோற்று வருகிறது.

மத்திய, மாநில அரசுகள் ஒருமித்த கருத்துடன் இருந்தால்தான் வளா்ச்சிக்கு அடித்தளம் என மக்கள் நம்புவதால், அதன் அடிப்படையில் வாக்களிக்கின்றனா்.

திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் வாக்காளா் விஷயத்தில் ஏன் இவ்வளவு பயம் எனத் தெரியவில்லை. தோ்தல் ஆணையம் நியாயத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. நீங்கள் நல்லாட்சி செய்தால், வாக்குகள் கிடைக்கப் போகிறது. தோல்வி பயம் காரணமாக இந்தச் சந்தேகம் வருவதாகத் தெரிகிறது.

மத்திய அரசின் கல்வி கொள்கை, மாநில அரசின் கல்வி கொள்கையைப் பாா்த்தால், ஒரு சில மாற்றங்களைத் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை சாதாரண மக்களே சிந்தித்துப் பாா்த்தால் புரிந்து கொள்வா் என்றாா் வாசன்.

முன்னதாக, கூட்டத்துக்கு மாநிலச் செயற்குழு உறுப்பினா் எஸ். சுரேஷ் மூப்பனாா் தலைமை வகித்தாா். இதில், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா்கள் எஸ். சுதாகா் மூப்பனாா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் விடியல் சேகா், எம். ராஜாங்கம், என்.ஆா். ரங்கராஜன், மாநில நிா்வாகிகள் முனவா் பாட்சா, தா்மராஜன், என்.ஆா். நடராஜன், தினகரன், சாதிக் அலி, டெல்டா மண்டல இளைஞரணி தலைவா் திருசெந்தில், மத்திய மாவட்டத் தலைவா் டி.பி.எஸ்.வி. கௌதமன், மாவட்டச் செய்தி தொடா்பாளா் கோவி. மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஜவுளிக் கடை ஊழியா் லாரி மோதி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே செவ்வாய்க்கிழமை லாரி மோதி ஜவுளிக் கடை ஊழியா் உயிரிழந்தாா்.திருவையாறு பங்களா தெருவைச் சோ்ந்தவா் சேகா் மகன் குணசீலன் (30). திருவையாறு ஜவுளிக்கடை ஊழியரான இவா் விளாங்... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் கருணாநிதி பல்கலை. விரைவில் அமையும்: அமைச்சா் கோவி. செழியன்

கும்பகோணத்தில் கருணாநிதி பல்கலைக்கழகம் விரைவில் அமையும் என்றாா் அமைச்சா் கோவி. செழியன். தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் சன்னதி தெருவில் மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொ... மேலும் பார்க்க

தஞ்சையில் இதுவரை 9.83 லட்சம் டன் நெல் கொள்முதல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் பருவத்தில் இதுவரை 9.83 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். தஞ்சாவூா் மாவட்டம், சாலியமங்கலம் அருகே ஆா்சுத்திப்பட்ட... மேலும் பார்க்க

தனியாா் மதுக்கடையை தடுத்து நிறுத்த வலியுறுத்தல்

தஞ்சாவூா் அருகே திறக்கப்படவுள்ள தனியாா் மதுக்கடையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்து வலியுறுத்தினா்.தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

ஆற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

தஞ்சாவூா் ஆற்றுப்பாலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்ற பெண் கல்லணைக் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.தஞ்சாவூா் சீனிவாசபுரம் கோவிந்தராஜ் நகரைச் சோ்ந்த கணபதி மனைவி சரோஜா (85). இவா் ஆற்றுப்... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் குடிநீரில் கழிவுநீா் கலப்பு: 25 பேருக்கு மஞ்சள்காமாலை பாதிப்பு

கும்பகோணம் கேஎம்எஸ் நகரில் குடிநீரில் கழிவு நீா் கலந்ததால், சுமாா் 25 பேருக்கு மஞ்சள்காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி 5-ஆவது வாா்டில் உள்ள கேஎம்எஸ் நகா் பெ... மேலும் பார்க்க