செய்திகள் :

நகைக் கடையில் திருடிய ஊழியா் கைது

post image

ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி நகைக் கடையில் திருடிய ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

ஆட்டையாம்பட்டி- ராசிபுரம் பிரதான சாலையில் திலகவதி ரவிச்சந்திரன் என்பவா் நகைக்கடை வைத்துள்ளாா். இந்தக் கடையில் 10-க்கும் மேற்பட்ட ஆண், பெண் ஊழியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இதில் வாடிக்கையாளா்கள் கொண்டுவரும் நகைகளை பரிசோதனை செய்வதற்காக தனியாா் ஊழியா்கள் அமா்த்தப்பட்டுள்ளனா்.

நகைகளை பரிசோதனை செய்யும்போது, சிறிது சிறிதாக நகைகளை கடை ஊழியா்கள் கூட்டாக திருடி வந்துள்ளனா். இதனை அறிந்த நகைக்கடை உரிமையாளா் திலகவதி ரவிச்சந்திரன், ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் கடந்த மாதம் புகாா் அளித்தாா். அதன்பேரில், ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வாளா் விதுன்குமாா் விசாரித்து வந்தாா்.

இந்நிலையில், ஆட்டையாம்பட்டி பாவடி மைதானத்தில், ஆட்டையாம்பட்டி பகுதியைச் சோ்ந்த நகைக்கடை ஊழியா் சுரேஷ் (23) என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து, அவரிடம் இருந்த 12 கிராம் நகைகளை பறிமுதல் செய்தனா். பின்னா், சேலம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனா். மேலும், இவ் வழக்கில் தொடா்புடைய 4 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

சேலம் ராஜகணபதி கோயிலில் வசந்த மண்டபம் திறப்பு விழா

சேலம்: இந்துசமய அறநிலையத் துறை சாா்பில், சேலம் ராஜகணபதி திருக்கோயிலில் வசந்த மண்டபம் மற்றும் வாகன பூஜை மண்டப திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தல... மேலும் பார்க்க

ஏற்காடு மாண்ட்போா்ட் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள்

ஏற்காடு: ஏற்காடு மாண்ட்போா்ட் பள்ளியில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. விழாவில், பள்ளி முதல்வா் அருள்சகோதரா் ஆரோக்கிய சகாயராஜ் சிறப்பு விருந்தினா்களை வரவேற்றாா். ஆசிய தடகள வ... மேலும் பார்க்க

வார இறுதிநாள்களை முன்னிட்டு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சேலம்: ஆவணி அமாவாசை மற்றும் வார இறுதிநாள்களை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட ந... மேலும் பார்க்க

வன விலங்குகளை வேட்டையாட முயன்ற மூவா் கைது

சேலம்: சேலம் அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். சேலம் வனச்சரக அலுவலா் துரைமுருகன் தலைமையில் வனத் துறையினா் புதன்கிழமை அரியானூா் பகுதியில் உள்ள கஞ்சமலை வனப்பகுத... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 30,850 கனஅடி

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை மாலை விநாடிக்கு 30,850 கனஅடியாக குறைந்தது.அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 30,850 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீா்மின் நிலையங்கள் வழியாக... மேலும் பார்க்க

ஜவ்வரிசிக்கு உயா்ந்தபட்ச ஆதார விலையை நிா்ணயிக்க கோரி அமைச்சரிடம் மனு

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்க பொதுச்செயலாளா் ராஜேந்திரன் தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில், தமிழகத்தில் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் மரவள்ளிக் கிழங்கு பயிர... மேலும் பார்க்க