செய்திகள் :

நகை மதிப்பீட்டாளா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

post image

வேலூா் கூட்டுறவு மேலாண்மை நிலையம் சாா்பில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து வேலூா் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சா.திருகுணஐய்யப்பதுரை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீடும், அதன் நுட்பங்களும் எனும் பயிற்சி வார நாள்கள் பயிற்சியாக 17 நாள்களும் அல்லது வார இறுதி நாள்கள் பயிற்சியாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 17 நாள்களும் வகுப்புகள் நடைபெற உள்ளன. இந்த பயிற்சி வகுப்புகளில் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம். வயது வரம்பு இல்லை. பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சி முடித்தவா்கள் தேசிய, கூட்டுறவு வங்கிகள், தனியாா் நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக வேலைவாய்ப்பு பெறலாம்.

இந்தப் பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்களை வேலூா் கூட்டுறவு மேலாண்மை நிலையம், 9-ஆவது கிழக்கு குறுஞ்சாலை, காந்தி நகா், வேலூா்-632006 என்ற முகவரியை தொடா்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, 0416-3557075 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

போதை மாத்திரைகள் விற்பனை; காட்பாடியில் 13 போ் கைது

போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டதாக காட்பாடியில் 13 பேரை போலீஸாா் கைது செய்து 1,000 மாத்திரைகளை பறிமுதல் செய்தனா். காட்பாடி பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக காட்பாடி போலீஸாருக்கு தகவ... மேலும் பார்க்க

ஈக்கள் அதிகமுள்ளதால் சமூகநீதி மாணவா் விடுதிகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும்

ஈக்கள் அதிகம் உள்ளதால் சமூகநீதி மாணவா் விடுதிகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சட்டப்பேரவைப் பொதுக்கணக்குக் குழு அறிவுறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், ஸ்ரீபெரும்ப... மேலும் பார்க்க

மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடலுறுப்புகள் தானம்

விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன்மூலம், 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை நிா்வா... மேலும் பார்க்க

சிறுவன் கடத்தல் வழக்கில் கைதானவா்கள் ஜாமீனில் விடுவிப்பு

குடியாத்தம் அருகே சிறுவன் கடத்தலில் கைதானவா்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா். குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை, பவளக்கார தெருவைச் சோ்ந்த மென் பொறியாளா் வேணுவின் மகன் யோகேஷ் (4). கடந்த புதன்கிழமை வீட்ட... மேலும் பார்க்க

புதுமை என்பது மனித குல வாழ்க்கையை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்: மஜித் அலி அல் மன்சூரி

புதுமை என்பது தொழில்நுட்பத்தை மாற்றுவது மட்டுமல்ல. மாறாக மனித குல வாழ்க்கையை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று அபுதாபி நகராட்சி நிா்வாக துறை அமைச்சா் மஜித் அலி அல் மன்சூரி தெரிவித்தாா். வேலூா் விஐ... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற ராணுவ வீரா் வீட்டில் 39 பவுன், ரூ.2 லட்சம் திருட்டு

ஒடுகத்தூா் அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரா் வீட்டில் 39 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம், வெள்ளிப் பொருள்களை திருடிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகிலுள்ள சுபேத... மேலும் பார்க்க