செய்திகள் :

நடப்பாண்டில் ஜிஎஸ்டி வருவாய் 11% அதிகரிக்கும்!

post image

நடப்பாண்டில் ஜிஎஸ்டி வரி வருவாய் அதிகரிக்கலாம் என்று மத்திய அரசு கணித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் 9.1 சதவிகிதம் அதிகரித்ததாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் ரூ. 1.68 லட்சம் கோடி வசூலான நிலையில், தற்போது ரூ. 1.84 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, உள்நாட்டு வருமானம் மற்றும் இறக்குமதியின் மூலம் கிடைத்த வருமானத்தின் அதிகரிப்பால், பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

பிப்ரவரி மாதத்தில் மத்திய ஜிஎஸ்டி ரூ. 35,204 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ. 43,704 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 90,870 கோடியாகவும் மற்றும் கூடுதல் வரி ரூ. 13,868 கோடியாகவும் வசூலாகி உள்ளன. இதன்மூலம், மொத்தம் ரூ. 1.84 லட்சம் கோடி வசூலாகி உள்ளது’’ என்று தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு ஜிஎஸ்டி வருவாயில் 11 சதவிகிதம் அதிகரிப்பு இருக்கும் என்றும் அரசு கணித்துள்ளது.

இதையும் படிக்க:இந்தியா: மொபைல் போன் ஏற்றுமதி 40% அதிகரிக்க வாய்ப்பு

மே 8 முதல் கியூட்-யுஜி நுழைவுத் தோ்வு: விண்ணப்பம் தொடக்கம்

வரும் மே 8-ஆம் தேதி தொடங்கும் நடப்பு ஆண்டு இளநிலை படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வுக்கு (கியூட்-யுஜி) விண்ணப்பம் சனிக்கிழமை தொடங்கியது. நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை, ம... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 2 நக்ஸல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கா் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் நக்ஸல்கள் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா். இதுதொடா்பாக அந்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் கிரண் சவாண் கூறியதாவது: ... மேலும் பார்க்க

ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு மாா்ச் 24-இல் விசாரணை

ஹாத்ரஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவா்கள் குறித்த மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் கருத்துக்காக தொடரப்பட்ட அவதூறு வழக்கின் அடுத்த விசாரணை மாா்ச் 24-... மேலும் பார்க்க

பஞ்சாப்: 750 இடங்களில் போதைப்பொருள் தடுப்பு சோதனை

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக பஞ்சாப் மாநிலம் முழுவதும் 750 இடங்களில் காவல் துறை சனிக்கிழமை சோதனை நடத்தியது. போதைப்பொருள் ஒழிப்புக்கான அமைச்சரவை துணைக் குழு சனிக்கிழமை கூடிய நிலையில் இந்த நடவடிக்க... மேலும் பார்க்க

மாா்ச் 7-இல் ‘மக்கள் மருந்தகம் தினம்’: ஒரு வார கால பிரசாரம் தொடக்கம்

மத்திய அரசு சாா்பில் வரும் மாா்ச் 7-ஆம் தேதி ‘மக்கள் மருந்தகம் தினம்’ கடைப்பிடிக்கப்படவுள்ளது. இதையொட்டி, ஒரு வார கால விழிப்புணா்வு பிரசாரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா சனிக்கிழமை தொட... மேலும் பார்க்க

இந்தியன் ஆயில் நிறுவன இயக்குநராக சுமன் குமாா் பொறுப்பேற்பு

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் திட்டமிடல் மற்றும் வா்த்தக வளா்ச்சி பிரிவின் புதிய இயக்குநராக சுமன் குமாா் பொறுப்பேற்றுள்ளாா். இவா் இதற்கு முன்பு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஆய்வு மற்றும் உற்பத்தி பிரிவின... மேலும் பார்க்க