செய்திகள் :

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடாத ரிஷப் பந்த்; மிட்செல் மார்ஷ் கூறியதென்ன?

post image

நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் சரியாக விளையாடாதது குறித்து மிட்செல் மார்ஷ் பேசியுள்ளார்.

லக்னௌ அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரிஷப் பந்த்துக்கு நடப்பு ஐபிஎல் சீசன் சரியாக அமையவில்லை. மெகா ஏலத்தில் ரிஷப் பந்த் ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு லக்னௌ அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அவர் மீது நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன.

இதையும் படிக்க: 10 கிலோ உடல் எடையைக் குறைத்த சர்பராஸ் கான்!

இருப்பினும், ரிஷப் பந்த்துக்கு நடப்பு ஐபிஎல் தொடர் சிறப்பானதாக அமையவில்லை. இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பந்த் 134 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 100-க்கும் குறைவாக உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு தில்லி கேபிடல்ஸுக்காக அறிமுகமான ரிஷப் பந்த்துக்கு நடப்பு ஐபிஎல் தொடரே மிகவும் மோசமான ஐபிஎல் தொடராக அமைந்துள்ளது.

மிட்செல் மார்ஷ் கூறியதென்ன?

நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் தாக்கத்தை ஏற்படுத்த தவறிய நிலையில், நடப்பு ஐபிஎல் தொடர் தனக்கு சிறப்பானதாக அமையவில்லை என ரிஷப் பந்த்தான் முதலில் கூறினார் என மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நடப்பு சீசன் ரிஷப் பந்த்துக்கு சரியாக அமையவில்லை என்பதை அவர்தான் முதலில் கூறினார். ஆனால், கிரிக்கெட்டில் இதுபோன்ற காலக்கட்டங்களும் இருக்கும் என்றே கூறுவேன். ரிஷப் பந்த் மிகவும் அற்புதமான வீரர் என்பது நமக்குத் தெரியும். அவர் மிக அதிக திறமைகளைக் கொண்ட வீரர். அதனால், அவர் விரைவில் மீண்டும் ஃபார்முக்கு வருவார். கடைசி இரண்டு போட்டிகளில் அவர் நன்றாக விளையாடி ரன்கள் குவிப்பார் என நம்புகிறேன்.

இதையும் படிக்க: மாற்றுவீரர்களாக மும்பை அணியில் இணையும் நட்சத்திர பட்டாளம்!

அணிக்காக என்னால் முடிந்த அளவுக்கு பங்களிப்பை வழங்குகிறேன். கடைசி இரண்டு போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கி அணிக்கு வெற்றி பெற்றுத் தர விரும்புகிறேன். ஐபிஎல் மிகவும் போட்டி நிறைந்த தொடர். இந்த சீசனில் சில போட்டிகளில் வெற்றிக்கு அருகில் சென்று தோல்வியடைந்தோம். அந்த தோல்விகள் எங்களுக்கு சிக்கலாக அமைந்துவிட்டது என்றார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

சென்னையை வென்றது ராஜஸ்தான்

ஐபிஎல் போட்டியின் 62-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது. முதலில் சென்னை 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள... மேலும் பார்க்க

ஆயுஷ், ப்ரீவிஸ் அதிரடி: ராஜஸ்தானுக்கு 188 ரன்கள் இலக்கு!

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 187 ரன்களை எடுத்துள்ளது. ஐபிஎல் 62-ஆவது போட்டியில் சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தில்லியில் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற... மேலும் பார்க்க

நான் எப்போது அழுதேன்? 14 வயது வீரர் சூர்யவன்ஷி விளக்கம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி முதல் போட்டியில் அழுதது குறித்து பேசியுள்ளார். இந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் அணி மோசமாக விளையாடினாலும் அந்த அணியின் இளம் வீரர் 14 வயதில் பேட்டிங் செய்து உல... மேலும் பார்க்க

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சிஎஸ்கே பேட்டிங்!

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ... மேலும் பார்க்க

ஒவ்வொருவரும் கே.எல்.ராகுல் மாதிரி விளையாட வேண்டும்: ஹேமங் பதானி

தில்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹேமங் பதானி கே.எல்.ராகுலைப் பாராட்டி பேசியுள்ளார். ஐபிஎல் 60-ஆவது போட்டியில் தில்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தில்லி 20... மேலும் பார்க்க

ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு; இறுதிப்போட்டி எங்கே?

ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் நடத்தப்படும் இடங்களை ஐபிஎல் நிர்வாகம் இன்று (மே 20) அறிவித்துள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்... மேலும் பார்க்க