செய்திகள் :

`நடிகர் சஞ்சய் தத் நினைத்தால் மும்பை குண்டு வெடிப்பு நடந்திருக்காது' -உஜ்வல் நிகம் எம்பி சொல்வதென்ன?

post image

1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 267 பேர் உயிரிழந்தனர். 700-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தார். இக்குண்டு வெடிப்பை நடத்திய தாவூத் இப்ராகிம் தற்போது பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறான்.

இக்குண்டு வெடிப்புக்கு தேவையான வெடிகுண்டுகளை மும்பைக்கு கொண்டு வந்த அபுசலேம் தற்போது போர்ச்சுக்கல் நாட்டில் இருந்து நாடு கடத்திக்கொண்டு வரப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

சஞ்சய தத்

பாகிஸ்தான் தங்களது நாட்டில் தாவூத் இப்ராகிம் இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறது. மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டு வந்தது. இவ்வழக்கில் நடிகர் சஞ்சய் தத் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இதில் ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக அவருக்கு கோர்ட் 6 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது.

அவர் தனது தண்டனையை புனே எரவாடா சிறையில் கழித்தார். மும்பை தொடர்குண்டு வெடிப்பு விசாரணைக்கு வந்தபோது அரசு சார்பாக வழக்கறிஞராக உஜ்வல் நிகம் ஆஜரானார்.

அவர் கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க சார்பாக மும்பையில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து உஜ்வல் நிகமை ஜனாதிபதி முர்மு ராஜ்ய சபையின் நியமன உறுப்பினராக நியமித்து இருக்கிறார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக பணியாற்றிய உஜ்வல் நிகம் பல முக்கிய வழக்குகளில் அரசு வழக்கறிஞராக ஆஜராகி இருக்கிறார். அவர் மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் ஆஜரானது குறித்து அளித்துள்ள பேட்டியில் பல முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

மும்பை குண்டு வெடிப்பு சம்பவம்

உஜ்வல் நிகம் தனது பேட்டியில், ''1993-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இக்குண்டு வெடிப்பு நடக்கும் முன்பு மும்பைக்குள் வேனில் ஆயுதங்கள், வெடிகுண்டுகள் கொண்டு வரப்பட்டது.

அந்த வேனை தாவூத் இப்ராகிம் கூட்டாளி அபுசலேம் நடிகர் சஞ்சய் தத் வீட்டிற்கு கொண்டு வந்தார். அதில் இருந்து சில வெடிகுண்டுகளையும், துப்பாக்கிகளையும் சஞ்சய் தத் எடுத்துக்கொண்டார். பின்னர் அனைத்தையும் திரும்ப கொடுத்துவிட்டு ஒரு ஏ.கே.47 ரக துப்பாக்கியை மட்டும் தன்வசம் வைத்துக்கொண்டார்.

அந்த நேரம் இது குறித்து சஞ்சய் தத் போலீஸில் தெரிவித்து இருந்தால் போலீஸார் விசாரித்து இக்குண்டு வெடிப்பை தடுத்து நிறுத்தி இருப்பார்கள்.

இதை சஞ்சய் தத் வழக்கறிஞரிடமும் தெரிவித்தேன். அவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை பயன்படுத்தி சுடவில்லை. ஆனால் அவர் வெடிகுண்டுகள் குறித்து போலீஸில் சொல்லாமல் போனதால் தொடர் குண்டு வெடிப்பு நடந்து நூற்றுக்கணக்கானோர் இறக்க நேரிட்டது. சட்டத்தின் பார்வைக்கு சஞ்சய் தத் செயல் குற்றமாக கருத்தப்பட்டாலும், அவரை குற்றமற்றவராகவே நான் பார்க்கிறேன். சஞ்சய் தத் இவ்வழக்கில் சிறப்பு நீதிமன்றம் தண்டனை அறிவித்தபோது, அதிர்ச்சியடைந்தார்.

அஜ்மல் கசாப் வழக்கிலும் அரசு சார்பாக ஆஜரானார்.

அவரது உடலில் ஒருவித பதட்டத்தை என்னால் பார்க்க முடிந்தது. அவரது தனது கட்டுப்பாட்டை இழந்து காணப்பட்டார். அந்நேரம் நான் அவருக்கு அருகில் நின்றேன். உடனே அவரிடம் பேசினேன். அவருடன் என்ன பேசினேன் என்பது குறித்து இதுவரை நான் யாரிடமும் சொன்னது கிடையாது.

முதல்முறையாக அந்த ரகசிய்த்தை சொல்கிறேன். நான் சஞ்சய்தத்திடம், ''பதட்டம் அடையவேண்டாம். மீடியாக்கள் பார்க்கின்றன. நீங்கள் ஒரு நடிகர். தண்டனையை கண்டு பயந்தால் நீங்கள் தவறு செய்து இருப்பதாக மக்கள் நினைப்பார்கள். மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னேன். அதற்கு அவர் ஆமாம் சார், ஆமாம் சார் என்று தெரிவித்தார்'' என்று தெரிவித்தார்.

உஜ்வல் நிகம் மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் மார்கமாக வந்து தாக்குதல் நடத்திய வழக்கிலும் அரசு சார்பாக ஆஜரானார். இவ்வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒரே குற்றவாளியான அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டான்.

ஏமன் கொலை வழக்கு; Blood Money-க்கு உடன்பாடு? - கேரள நர்சின் மரண தண்டனை நிறுத்தம்! - பின்னணி என்ன?

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் நர்ஸ் நிமிஷா பிரியா (34). நர்ஸிங் படித்துமுடித்த கையோடு 2008-ம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு வேலைக்குச் சென்றார். 2011-ம் ஆண்டு தொடுபுழாவைச்... மேலும் பார்க்க

`டேங்கை மாற்றினால் போதுமா; குற்றவாளிகள்?’ - அரசுப் பள்ளி தண்ணீர் தொட்டியில் மலம்; குமுறும் மக்கள்

திருவாரூர் அருகே உள்ள காரியாங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டை கடந்த இப்பள்ளியில் எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்... மேலும் பார்க்க

கோவை: பள்ளி மாணவனை தாக்கி, பாலியல் தொல்லை - இளைஞர் கைது!

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள சாமளாபுரம் பகுதியில் 13 வயது மாணவர் வசித்து வருகிறார். அவர் அன்னூர் அருகே அரசு விடுதியில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு வ... மேலும் பார்க்க

தூத்துக்குடி கொலை வழக்கில் ஜாமீன் பெற்ற இளைஞர் சேலத்தில் படுகொலை.. காவல் நிலையம் அருகே கொடூரம்

தூத்துக்குடி மாவட்டம் தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் மதன் குமார் (28). இவர் ஒரு மாதத்திற்கு முன்பு தூத்துக்குடியில் நடந்த இரட்டை கொலை வழக்கு ஒன்றில் ஜாமின் பெற்று சேலம் மாநகர் அஸ்தம்பட்டி காவல்நிலைய... மேலும் பார்க்க

60 வயது முதியவருக்கு திருமண ஆசை காட்டி மோசடி; ரூ.15 லட்சத்தை சுருட்டிய பூசாரி-நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் ஒருவர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கோயில்வழி பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்ப... மேலும் பார்க்க

நிறப்பாகுபாட்டை உடைத்து உலக அழகிப் பட்டம் - ஆப்ரிக்கா வரை சென்ற புதுச்சேரி பெண்ணின் தற்கொலை பின்னணி

மாடலிங் மீதான காதலால் மருத்துவப் படிப்பை துறந்த சங்கரப்பிரியாபுதுச்சேரி காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான சங்கரப்பிரியா. சிறு வயது முதல் படிப்பில் சுட்டியாக இருந்த சங்கரப் பிரியா, பல சூழல... மேலும் பார்க்க