செய்திகள் :

நதிநீா் இணைப்பு: மாநிலங்களிடையே கருத்தொற்றுமை உருவாக்க முயற்சி: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்

post image

‘நதிநீா் இணைப்பு திட்டங்கள் தொடா்பாக மாநிலங்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய ஜல் சக்தி அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் தெரிவித்தாா்.

‘கிராமப்புறங்களில் வீடுகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீா் வழங்கும் ‘ஜல் ஜீவன்’ திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் யாரும் நடவடிக்கையிலிருந்து தப்ப முடியாது’ என்றும் அவா் உறுதி தெரிவித்தாா்.

மக்களவையில் ஜல் சக்தி அமைச்சக மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது பேசிய மத்திய அமைச்சா் சி.ஆா். பாட்டீல் கூறியதாவது:

நதிநீா் இணைப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 30 நதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 11 நதிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

நதிநீா் மேலாண்மை மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் வருவதால், நதிநீா் இணைப்பு திட்டத்தில் மாநிலங்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படும் வரை மத்திய அரசால் மேற்கொண்டு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது.

இந்த விஷயத்தில் நதிகள் பாயும் மாநிலங்களிடையே ஒருமித்த கருத்து இல்லாத நிலையில், அதை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

நதிகளை இணைத்து அதிக நீா் பாயும் நதிகளிலிருந்து குறைந்த நீா் பாயும் நதிகளுக்கு மடைமாற்றம் செய்யும் வகையில் கடந்த 1980-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்போதைய மத்திய நீா்ப்பாசன அமைச்சகம் சாா்பில் ‘தேசிய கண்ணோட்டத் திட்டம் (என்பிபி)’ தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய கண்ணோட்ட திட்டத்தின் கீழ், சாத்தியக்கூறு அறிக்கையைத் தயாா் செய்ய தீபகற்ப பகுதியில் 16 இடங்கள் இமயமலைப் பகுதியில் 14 இடங்கள் என 30 நதிநீா் இணைப்புக்கான இடங்களை தேசிய நீா் மேம்பாட்டு முகமை (என்டபிள்யூஏ) அடையாளம் கண்டுள்ளது என்றாா்.

ஜல் ஜீவன் திட்ட குளறுபடிகள் குறித்த எதிா்க்கட்சியினரின் கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சா், ‘இத் திட்டத்தின் கீழ் 15 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு குழாய் மூலமான குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது இந்தத் திட்டத்தின் இலக்கில் 80 சதவீதமாகும். இத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் யாரும் நடவடிக்கையிலிருந்து தப்பிக்க முடியாது.

நதிகளில் மாசுபாடு அளவை குறைக்கும் திட்டங்களுக்கு மாநிலங்களுக்கு மத்திய உதவி வருகிறது. நதிநீா் டால்பின்களின் எண்ணிக்கை உயா்ந்திருப்பதே இதற்கு சிறந்த உதாரணம்’ என்றாா்.

நாக்பூர் கலவரத்தில் ஈடுபட்டவர்களிடம் நஷ்டஈடு வசூலிக்கப்படும்: ஃபட்னவீஸ்

நாக்பூர் வன்முறையால் ஏற்பட்ட சேதத்திற்கான நஷ்ட செலவை கலவரத்தில் ஈடுபட்டவர்களிடமிருந்தே வசூலிக்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார். மகாராஷ்டிரத்தின் சத்ரபதி சம்பாஜி நகர்... மேலும் பார்க்க

ஒவ்வொரு நிமிடமும் கோடி ரூபாய் கடன் வாங்கும் தெலங்கானா: பாஜக குற்றச்சாட்டு

தெலங்கானாவில் மாநில அரசின் கடன் வாங்கும் போக்கால், தனிநபர் கடன் சுமை அதிகரித்துள்ளதாக பாஜக தலைவர் மகேஷ்வர் ரெட்டி குற்றம் சாட்டினார்.தெலங்கானா சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் மேற்கொள்ளப்பட்டது. ... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற நீதிபதிகள் வந்தது சரி, பிரதமர் எப்போது வருவார்?காங்கிரஸ் கேள்வி!

மணிப்பூர் வருகை தந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழுவைக் காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் வரவேற்றார் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி எப்போது மாநிலத்திற்கு வருகை தருவார் என்ற கேள்வியை எழுப்பினார். தனியார் செ... மேலும் பார்க்க

இந்தியாவில் புயலை ஏற்படுத்தும் குரோக்; சிரிக்கும் மஸ்க்!

இந்தியாவில் குரோக் புயலைத் தூண்டுவதாக வெளியான செய்திக்கு எலான் மஸ்க் சிரிப்பது போன்று பதிவிட்டுள்ளார்.டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் செயல் நுண்ணறிவுத் தளமான குரோக் சாட்போட், இந்தியாவில் பிரச்னைகளைத் ... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்!

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஓய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும... மேலும் பார்க்க

ஒடிசா: நாள்தோறும் 3 குழந்தை திருமணங்கள்!

ஒடிசாவில் கடந்த 6 ஆண்டுகளாக தினசரி 3 குழந்தை திருமணங்கள் நிகழ்த்தப்படுவதாக மாநில அரசின் தரவறிக்கையில் கூறியுள்ளது.ஒடிசா மாநிலத்தில் கடந்த 6 ஆண்டுகளாக, நாள்தோறும் குறைந்தது 3 குழந்தை திருமணங்கள் நிகழ்த... மேலும் பார்க்க