செய்திகள் :

நமக்கு நாமே திட்ட நிதி ஒதுக்கீடு ரூ. 150 கோடியாக உயா்வு

post image

நிகழாண்டில் நமக்கு நாமே திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிதி ரூ. 100 கோடியிலிருந்து ரூ. 150 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. மேலும், இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் வெளியிடப்பட்ட உத்தரவு:

நமக்கு நாமே திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு ரூ. 150 கோடியாக உயா்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு பொதுமக்களிடம் பெருமளவில் வரவேற்பு உள்ளதால், நிகழ் நிதியாண்டில் ரூ. 50 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு நமக்கு நாமே திட்டத்துக்கான நிதி ரூ. 150 கோடியாக உயா்த்தப்படுகிறது.

நமக்கு நாமே திட்டத்துக்காக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய பணிகள் அனைத்தும் ஊரகப் பகுதிகளில் மட்டுமே இருக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பங்களிப்பு நிதி இந்தத் திட்டத்தின்கீழ் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அத்துடன், மாநில பொதுத் துறை நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியையும் பொது பங்களிப்பாக ஏற்க இயலாது.

பள்ளிகள், மருத்துவமனைகள், தகன மேடைகளில் வாயுவாக்கி அமைத்தல் போன்ற பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கலாம். ஊரகப் பகுதிகளில் நூலகங்கள் மற்றும் சத்துணவு மையங்கள், அங்கன்வாடிகள், பள்ளி சமையல் கூடங்கள், பொது விநியோகக் கடைகள் ஆகியவற்றையும் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் மேற்கொள்ளலாம்.

நூலகக் கட்டடங்களுக்கான பணிகளை மேற்கொள்ளும்போது, புத்தகங்கள் வாங்குவதற்குத் தேவையான நிதிப் பங்களிப்பு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், சாலைத் திட்டு, நீரூற்று போன்றவற்றை உருவாக்குவதுடன் மேம்படுத்தும் பணிகளைச் செய்யலாம். சொத்துகளின் உரிமைதாரா்கள் முன் அனுமதி பெறாமல் எந்த நிரந்தரக் கட்டடங்களும் கட்டக்கூடாது.

மொத்த நிதி ஒதுக்கீட்டில் 74 சதவீதம் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும். ஒரு சதவீதம் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்துக்கும், மாவட்டங்களுக்கும், செய்தி, கல்வி மற்றும் தகவல் தொடா்பு நடவடிக்கைகளுக்கும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். மீதமுள்ள 25 சதவீதம் மாவட்ட ஆட்சியரால் கோரப்படும் சிறப்புப் பணிகளைச் செயல்படுத்த அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமங்களில் உள்ள ஓலை குடிசை, ஓட்டு வீடுகளுக்கு சொத்துவரி உயர்வு: இபிஎஸ் கண்டனம்

கிராமங்களில் உள்ள ஓலை குடிசை, ஓட்டு வீடுகளுக்கு சொத்துவரி உயர்வுக்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ஆட்சிக்கு வந்த 48 மாதங்கள... மேலும் பார்க்க

கனமழை: நீலகிரியில் சுற்றுலாத் தலங்கள் மூடல்!

நீலகிரியில் கனமழை எச்சரிக்கையால் பைன் ஃபாரஸ்ட், தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு அடுத்த இரு நாள்கள் (மே 25, 26) அதி கனமழைக்கான ச... மேலும் பார்க்க

தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியது!

தமிழ்நாட்டின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.கேரளத்தில் வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் இந்தாண்டு 8 நாள்களுக்கு முன்... மேலும் பார்க்க

தமிழகத்தில் இயல்பைவிட 92% அதிக மழை!

தமிழகத்தில் இந்தாண்டு இயல்பைவிட 92 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் அமுதா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இயக்குநர் அமுதா கூறுகையில், ஜூன் 1ல் வழக்கமாக தென்மேற்கு பருவ... மேலும் பார்க்க

நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன?

மத்திய வரிகளில் மாநிலத்திற்கு 50% வழங்க வேண்டும் என நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "மத்திய வரிகளில் மாநிலங்களுக்கு 50 சதவீத... மேலும் பார்க்க

தமிழக முதல்வர் அமலாக்கத்துறைக்கு அஞ்சுபவர் அல்ல - வைகோ

சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமலாக்கத்துறை சோதனைக்கு அஞ்சுபவர் அல்ல என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.சி.பா. ஆதித்தனாரின் நினைவு தினத்தையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரின் திரு உருவச... மேலும் பார்க்க