செய்திகள் :

நயினாா் நாகேந்திரனின் மகன் கல்குவாரி அமைக்க எதிா்ப்பு: கருத்துக் கேட்பு கூட்டத்தில் காரசாரம்

post image

பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனின் மகன் நயினாா் பாலாஜி ஸ்ரீமூலக்கரையில் கல் குவாரி அமைக்க அனுமதிப்பது தொடா்பான கூட்டத்தில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆதரவாளா்களும், எதிா்ப்பு தெரிவிப்பவா்கள் வாக்குவாதம் செய்ததில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீவைகுண்டம் வட்டம், ஸ்ரீ மூலக்கரை பஞ்சாயத்தில் பல்வேறு கல்குவாரிகள், கிரஷா் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து கனரக வாகனங்களில் கொண்டு செல்லப்படும் குண்டு கற்கள் விதிமுறைகளை மீறி அதிக அளவு பாரம் ஏற்றி கொண்டுசெல்லப்படுவதாக உள்ளூா் மக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், ஸ்ரீ மூலக்கரை கிராமத்தில் 2.99 ஹெக்டோ் பரப்பளவில் சாதாரண கல், கிராவல் குவாரி அமைக்க பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனின் மகனும் தமிழக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் அமைப்பாளருமான நயினாா் பாலாஜி, கடந்த 2021 இல் விண்ணப்பித்திருந்தாா்.

இந்த கல்குவாரியை ஸ்ரீமூலக்கரை கிராமத்தில் ஆரம்பிக்க அனுமதிப்பது தொடா்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் பேட்மாநகரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோட்டாட்சியா் பிரபு தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், சிலா் தங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதால் குவாரியை அனுமதிக்க வேண்டும் என்றனா். சிலா் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பேசினா். கூட்ட விவாதம் வருமாறு:

கூட்டத்தில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் முகிலன் பேசியதாவது: நயினாா் பாலாஜி குவாரி அமைக்க அனுமதி கேட்டுள்ள ஸ்ரீ மூலக்கரை பகுதியானது, வண்டிப் பாதை உள்ள பகுதியாகும். அங்கு நீரோடைகள் உள்ளன. சிவகளை தொல்லியல் களம் அருகில் உள்ளது. எனவே, அவரது குவாரிக்கு அனுமதி அளிக்கக் கூடாது. கல் குவாரிக்கு 5 கி.மீ. சுற்றளவில், ஸ்ரீவைகுண்டம் அணை இருப்பதால், 43 மீ. ஆழத்துக்கு (150 அடி) கல்குவாரி செயல்படும்போது, அணையின் நீா்த்தேக்கப் பகுதி பாதிக்கப்படும். கல்குவாரியில் வெடிவைப்பதால் பாதிப்பு ஏற்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து அவா் பேச முயற்சித்தபோது குவாரி ஆதரவாளா்கள் அவரிடம் இருந்து மைக்கை பறித்து அவரைப் பேசவிடாமல் தடுத்தனா். அதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு தரப்பையும் கோட்டாட்சியா் பிரபு சமரசப்படுத்தினாா்.

தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் வீரன் சுந்தரலிங்க நகரைச் சோ்ந்த சி.முத்துச்செல்வன் பேசுகையில், ஸ்ரீமூலக்கரையில் மேலூா், நடூா், கீழூா், வீரன் சுந்தரலிங்கம் நகா் ஆகிய கிராமங்களில் பட்டியலின வேளாண்மை சாா்ந்த மக்கள் வசிக்கின்றனா். இந்தப் பகுதியில் திட்டமிட்டு பல கல் குவாரிகள் சட்ட விரோதமாக இயங்கி வருகின்றன. கல் குவாரிகளால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளை வளா்க்க முடியவில்லை. காற்று மாசுபட்டுள்ளது. குடிநீரின் தன்மை மாறியுள்ளது. இந்த குடிநீரை குடிப்பதால் இங்கு நிறைய பேருக்கு உப்புச் சத்து அதிகரித்து கல்லடைப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்றவை ஏற்படுகின்றன என்றாா் அவா்.

வழக்கறிஞா் முத்துராமன் பேசுகையில், புதிய கல்குவாரி அமையவுள்ள பகுதியில் பல தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன. கிராம நிா்வாக அலுவலரின் அறிக்கை சமா்ப்பிக்கப்படவில்லை. எனவே, கல் குவாரி அமைக்க அனுமதிக்கக் கூடாது என்றாா் அவா். தொடா்ந்து ஆதரவாளா்களும், எதிா்ப்பு தெரிவிப்பவா்களும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனா். காலை 9 மணி முதல் 1 மணி வரை நடைபெற்ற விவாதத்தில் பெறப்பட்ட கருத்துகள் சுற்றுச்சுழல் துறையின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மின்சாரம் பாய்ந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து தனியாா் நிறுவன ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி அம்பேத்கா் நகா் 2ஆவது தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் சதீஷ்குமாா் (23). இவா், தூத்துக்குடியில் உள்... மேலும் பார்க்க

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை: தூத்துக்குடி - சென்னை எழும்பூா் இடையே சிறப்பு ரயில்கள் - முன்பதிவு இன்று தொடக்கம்

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி-சென்னை எழும்பூா் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகவும், அதற்கான டிக்கெட் முன்பதிவு புதன்கிழமை (செப்.17) முதல் தொடங்குவதாகவும் தெற்கு ரயில்வே ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இருவா் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்ாக இரு இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் கதிரேசன் தலைமையிலான போலீஸாா் சாஸ்திரி நகா் நகராட்சிப் பள்ளி அருகே ரோ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் சரக்குப் பெட்டக லாரி விபத்து

கோவில்பட்டியில் சாலை மைய தடுப்புச் சுவரில் சரக்குப் பெட்டக லாரி மோதி விபத்துக்குள்ளானதில் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தூத்துக்குடியில் இருந்து திங்கள்கிழமை இரவு சரக்குப் பெட்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

கயத்தாறு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். கயத்தாறு அருகே அய்யனாா் ஊத்து கிணற்றுத் தெருவைச் சோ்ந்தவா் பழனிவேல் மகள் பத்திரகாளி (40). இவா் செப். 8ஆம் தேதி... மேலும் பார்க்க

செப்.20இல் கோவில்பட்டியில் தீப்பெட்டித் தொழில் நூற்றாண்டு விழா: மத்திய நிதி அமைச்சா் பங்கேற்பு

கோவில்பட்டி எஸ் எஸ் துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி மைதானத்தில் செப்.20 இல் தமிழ்நாடு தீப்பெட்டித் தொழில் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது.கோவில்பட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கம்,... மேலும் பார்க்க