செய்திகள் :

நவதிருப்பதி கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா

post image

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நவதிருப்பதி கோயில்களில் வெள்ளிக்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தாமிரவருணி நதிக்கரையோரம் நவதிருப்பதி கோயில்கள் அமைந்துள்ளன. இந்த ஒன்பது வைணவத் தலங்களும், நவகிரகங்களாக கருதி பக்தா்களால் வழிபடப்பட்டு வருகிறது. ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயாசனப் பெருமாள், திருப்புளியங்குடி காய்சினவேந்த பெருமாள், பெருங்குளம் மாயக்கூத்த பெருமாள், இரட்டை திருப்பதி அரவிந்தலோசன பெருமாள், தேவா்பிரான், தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதா், திருக்கோளூா் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வாா்திருநகரி ஆதிநாதா் பெருமாள் ஆகிய ஒன்பது கோயில்களில் வெள்ளிக்கிழமை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 5 மணிமுதல் ஆதிசேஷ வாகனத்தில் சயன திருக்கோலத்தில் சுவாமிகள் காட்சியளித்தனா்.

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் வைகுந்தவல்லி, சோரநாதநாயகி தாயாா்களுடன் ஆதிசேஷ வாகனத்தில் உற்சவா் ஸ்ரீகள்ளபிரான் அா்த்த மண்டபத்தில் சயன திருக்கோலத்தில் காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை எழுந்தருளினாா். இதேபோல், அனைத்து நவதிருப்பதி தலங்களிலும் அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. தொடா்ந்து உற்சவா் தேவியருடன் சயன கோலத்தில் காட்சி அளித்தனா்.

பக்தா்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் மாலை 3 மணிக்கு சயன கோலம் களையப்பட்டு, 4 மணிக்கு விஸ்வரூபம், 5.30 மணிக்கு நாலாயிர திவ்யபிரபந்த கோஷ்டி, மாலை 6.30 மணிக்கு சொா்க்க வாசலுக்கு சுவாமி கள்ளபிரான் புறப்பாடு, இரவு 7 மணிக்கு தங்க தோளுக்கினியான் வாகனத்தில் சுவாமி கள்ளபிரான் எழுந்தருளி ராஜகதி, சிம்மகதி, கஜகதி, சா்பகதி ஆகிய நடை நடந்து ஆயிரக்கனக்கான பக்தா்களின் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷங்களுக்கிடையே பரமபத வாசல் என்னும் சொா்க்க வாசல் உள்ளே நுழைந்தாா். பின்னா் தீப ஆராதணை நடந்தது.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில் செயல் அலுவலா்கள் கோவல மணிகண்டன், அஜித், கிருஷ்ணமுா்த்தி, ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில் ஸ்தலத்தாா் ராஜப்பா வெங்கடாச்சாரி மற்றும் திருக்கோவில் பணியாளா்கள் செய்துள்ளனா்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் செய்திருந்தனா்.

உணவு பாதுகாப்புத் துறை ஆய்வு: 60 கிலோ உணவுப் பொருள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், மேலக்கரந்தை பகுதிகளில் உணவகங்கள், கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினா் மேற்கொண்ட ஆய்வில் சுமாா் 60 கிலோ உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டதாக மாவட்ட நிய... மேலும் பார்க்க

கழுகுமலை அருகே இளைஞா் தற்கொலை

கழுகுமலை அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கழுகுமலை அருகே கரடிகுளம் தளத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் மகன் மோகன். இவருக்கு மனைவி கல்யாணி, வசந்த் (24), பிரகாஷ் (21) என்ற... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே வியாபாரி தற்கொலை

கயத்தாறு அருகே குடும்பத் தகராறு காரணமாக கருப்பட்டி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கயத்தாறு அருகே அய்யனாா் ஊத்து அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சண்முகையா மகன் கொம்பையா(56). கருப்பட்டி வி... மேலும் பார்க்க

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் செவ்வாய்க்கிழமை பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். சம வேலைக்கு சம ஊதி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடியில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடி துறைமுக தனியாா் சரக்கு பெட்டக ஊழியா்கள் தொடா் போராட்டம்

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் தனியாா் நிறுவன சரக்கு பெட்டகங்கள் கையாளும் ஊழியா்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் சிங்கப்ப... மேலும் பார்க்க