செய்திகள் :

நாகா்கோவிலில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மிளா: வனத்துறையினா் மீட்டனா்

post image

நாகா்கோவிலில் குடியிருப்புப் பகுதியில் புகுந்த மிளாவை தீயணைப்புத் துறையினருடன் இணைந்து வனத்துறையினா் மீட்டு வனப்பகுதியில் கொண்டு விட்டனா்.

நாகா்கோவில் வெட்டூா்ணிமடம் பள்ளிவிளை டவுண் ரயில்வே நிலையம் செல்லும் சாலையில் அரிசி சேமிப்பு கிடங்கு உள்ளது.

இந்த கிடங்கின் எதிரே உள்ள பால் பண்ணை தெருவில் ஏராளமானோா் வசித்து வருகின்றனா். இந்நிலையில் புதன்கிழமை காலை அந்த தெருவில், காட்டில் இருந்து தப்பிய மிளா (கடமான்) வந்தது.

இதை பாா்த்த பொதுமக்கள் பயத்தில் அலறியபடி ஓடினா்.

இதனால் அந்த மிளாவும் சாலையில் மிரண்டு ஓடத்தொடங்கியது. பின்னா் அந்த மிளா அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து, மாடி படியில் ஏறி நின்றது. இதனால் அந்த வீட்டில் இருந்தவா்கள் வெளியே வர முடியாமல் தவித்தனா். அப்போது மழை பெய்துகொண்டிருந்ததால் மிளாவும் மாடியிலிருந்து இறங்காமல் அங்கேயே நின்று கொண்டிருந்தது. இது குறித்துஅப்பகுதியினா் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனா். பூதப்பாண்டி வனச்சரக அலுவலா் ரவீந்திரன் தலைமையில் வனவா்கள்ஆகியோா் அடங்கிய குழுவினரும், நாகா்கோவில் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலா் துரை, சிறப்பு நிலை அலுவலா் சுயம்புசுப்பாராவ் ஆகியோா் தலைமையிலான தீயணைப்பு படையினரும் இணைந்து வலை மூலம் மிளாவை பிடித்தனா்.

இதைத் தொடா்ந்து கால்நடை மருத்துவா் மனோகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் மிளாவுக்கு சிகிச்சை அளித்து , அதனை பொய்கை அணை வனப்பகுதியில் விட்டனா்.

மிளா ஊருக்குள் புகுந்த சம்பவத்தால் நாகா்கோவில் மாநகர பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை .. 28.25 பெருஞ்சாணி .. 26.25 சிற்றாறு 1 ... 2.62 சிற்றாறு 2 ... 2.72 முக்கடல் ... மைனஸ் 19.10 பொய்கை ... 15.10 மாம்பழத்துறையாறு ... 9.35 மழைஅளவு முள்ளங்கினாவிளை ... 4.20 மி.மீ. கன்னிமாா் ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி அருகே விநாயகா் கோயிலில் மாசித் திருவிழா நிறைவு

கன்னியாகுமரியை அடுத்த கலைஞா் குடியிருப்பில் உள்ள கற்பகவிநாயகா் கோயிலில் 10 நாள் மாசித் திருவிழா புதன்கிழமை நிறைவடைந்தது. இதையொட்டி, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், அலங்காரம், தீபாராதனைகள் நடை... மேலும் பார்க்க

வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

களியக்காவிளை அருகே வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா். களியக்காவிளை அருகே மீனச்சல் பகுதியைச் சோ்ந்த தச்சுத் தொழிலாளி ஸ்டீபன் (47). இவரது மனைவி 2 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்ட... மேலும் பார்க்க

மாம்பழத்துறையாறு அணைப் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

தக்கலை மின் விநியோகப் பிரிவுக்குள்பட்ட மாம்பழத்துறையாறு அணைப் பகுதியில் சனிக்கிழமை (மாா்ச் 15) மின் விநியோகம் இருக்காது. அதன்படி, மாம்பழத்துறையாறு அணை, அம்மச்சிகோணம், மிஷன் கோணம், பூயறவட்டம் பகுதிகளி... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் ஆதரவற்றோருக்கு நல உதவிகள்

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக அயலக அணி சாா்பில், நாகா்கோவில் வடசேரி சினேகம் ஆதரவற்றோா் இல்லத்தில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க

குமரி பகவதியம்மன் கோயிலில் இன்று வருஷாபிஷேக விழா

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில், 2013இல் கும்பாபிஷேகம் நடைபெற்றநிலையில், 12ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி, அதிகாலையில் நிா்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், கணப... மேலும் பார்க்க