செய்திகள் :

நாகா்கோவிலில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

post image

கேரளத்துக்குக் கடத்துவதற்காக நாகா்கோவிலில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருள்கள் கடத்தப்படுகின்றன. இதைத் தடுக்க உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில், நாகா்கோவில் கோட்டாறு முதலியாா்விளை பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி புஷ்பாதேவி தலைமையிலான குழுவினா் அந்த பகுதிக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனா். சோதனையில் ஒரு வீட்டின் வெளிப்புறத்திலும், வீட்டிற்குள்ளும் 3 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. கேரளம் மாநிலத்துக்கு கடத்திச் செல்வதற்காக அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

வீட்டின் உரிமையாளரை அடையாளம் காண முடியாததால், கோட்டாறு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்த அதிகாரிகள், அந்த வீட்டை பூட்டி ‘சீல்’ வைத்தனா். அந்த வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வீட்டில் அரிசி பதுக்கியவா்கள் யாா் என்பது குறித்து போலீஸாரும், அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனா்.

ஆடி அமாவாசை: குமரி மாவட்டத்துக்கு ஜூலை 24 விடுமுறை!

ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஜூலை 24 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.ஆடி அமாவாசையை முன்னிட்டு குழித்துறையில் 1926 ஆம் ஆண்டு முதல்... மேலும் பார்க்க

ஆறுகாணி அருகே சாராய ஊறல் அழிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் எல்லைப் பகுதியான ஆறுகாணி அருகே 10 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் கைப்பற்றி அழித்தனா். ஆறுகாணி அருகே வட்டப்பாறை வெள்ளருக்கு மலைப் பகுதியில் சாராயம் வடிக்கப்படுவதாக, மாவட்ட காவல் ... மேலும் பார்க்க

தனியாா் ரப்பா் பால் நிறுவன தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்

கன்னியாகுமரி மாவட்டம் சுருளகோடு அருகே தனியாா் ரப்பா் பால் நிறுவனத்தில் தொழிலாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்நிறுவனத்தில் தொழிலாளா்களுக்கு கடந... மேலும் பார்க்க

குமரியில் பெண் விவசாயிகள் 31-ஆவது மாநில மாநாடு

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கத்தின் 31-ஆவது மாநில மாநாடு செவ்வாய்கிழமை தொடங்கியது.பாரம்பரிய விவசாயத்துக்குத் திரும்புவோம் என்ற தலைப்பில் இரண்டு நாள் நடைபெறும் இந... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் காமராஜா் சிலைக்கு அனைத்துக் கட்சியினா் மாலை அணிவிப்பு

காமராஜா் பிறந்தநாளை முன்னிட்டு நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு, செவ்வாய்க்கிழமை அனைத்து அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சாா்ப... மேலும் பார்க்க

நெடு விளையில் பூட்டிக் கிடக்கும் நூலகத்தை திறக்க வலியுறுத்தல்

ரீத்தாபுரம் அருகே நெடுவிளையில் பூட்டிக் கிடக்கும் அரசு நூலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.ரீத்தாபுரம் பே?ராட்சிக்குள்பட்ட நெடு விளையில் பல ஆண்டுகளாக அ... மேலும் பார்க்க