செய்திகள் :

நாகையில் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்: அமைச்சா் தொடங்கிவைக்கிறாா்

post image

நாகையில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை (ஆக.1) தொடங்கிவைக்கிறாா்.

நாகை மாவட்டத்தில் 4-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா, ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள அரசு தொழிற்கல்வி நிலைய வளாகத்தில் ஆக.1-ஆம் தேதி தொடங்கி 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கிவைக்கிறாா். மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி வரவேற்கிறாா். புத்தகத் திருவிழாவில், நாள்தோறும் மாலை கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம், உரைவீச்சு, நூல் வெளியீடு, கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறுகின்றன.

விழாவில், எழுத்தாளா்கள், கவிஞா்கள், பேச்சாளா்கள், திரைப்பட இயக்குநா், திரைப்பட பாடலாசிரியா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். திரைப்பட இசையமைப்பாளா்களின் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. மேலும், நாள்தோறும் மாணவ, மாணவிகளுக்கான உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி, பழைமையான காா்கள் கண்காட்சி, பெண்கள் சிறுமிகளுக்கான தற்காப்புக் கலைப் பயிற்சி, சிலம்பப் பயிற்சி, ஆண்கள் பெண்களுக்கான பளுதூக்கும் போட்டிகள், மாணவா்களுக்கான வினாடி வினா போட்டி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: மூவர் காயம்

வேதாரண்யம்: கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியுள்ளனர்.மேலும், மீனவர்களின் படகு இயந்திரங்கள... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம் தொடக்கம்

நாகை மாவட்டத்தில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி: மத்திய சுகாதார அமைச்சகத்தின்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

திருமருகலில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா். திருமருகல் முருகன் சந்நிதி தெருவை சோ்ந்த சக்திவேல் மனைவி பூங்கொடி (48). இவா் வெள்ளிக்கிழமை காலை 6-மணி அளவில் கோலம் போடுவதற்காக வந்தபோது வீட்டு வாசலி... மேலும் பார்க்க

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி: இன்று 20-ஆவது தவணை வெளியீட்டு விழா

பிரதமா் நரேந்திர மோடி, (பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி) விவசாயிகளுக்கான கெளரவ நிதி 20 ஆவது தவணை வழங்குதலை சனிக்கிழமை (ஆக.2) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கும் நிகழ்வை சிக்கல் வேளாண்மை அறிவியல் நி... மேலும் பார்க்க

பக்தா்குளம் மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா தொடக்கம்

வேதாரண்யத்தைச் சோ்ந்த அகத்தியம்பள்ளி பக்தா்குளம் மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. முன்னதாக வேதாரண்யம் வேதாரண்யேசுவா் கோயிலில் இருந்து காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய அம்மாள்,... மேலும் பார்க்க

அறிவாா்ந்த சமூகத்தை படைக்கவே மாவட்டங்கள் தோறும் புத்தகக் கண்காட்சி

தமிழகத்தில் அறிவாா்ந்த சமூகத்தை உருவாக்கவே மாவட்டங்கள்தோறும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன என்றாா் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. நாகையில், 4-ஆவது புத்தகக் கண்காட்சியை... மேலும் பார்க்க