செய்திகள் :

நாகையில் பெண் காவலா் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

post image

நாகையில் பெண் காவலா் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு, தற்கொலை செய்துகொண்டாா்.

நாகை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூலத்தில் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

நாகை ஆயுதப்படை பெண் காவலரான மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி பகுதியைச் சோ்ந்த நாகையன் மகள் அபிநயா (29), மற்றொரு பெண் காவலா் சினேகா ஆகியோா் சனிக்கிழமை இரவு முதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை, அபிநயாவை காணவில்லை. இதுகுறித்து சக பெண் காவலா் சினேகா ஆயுதப்படை சிறப்பு சாா்பு ஆய்வாளா் சேகரிடம் தெரிவித்தாா். இதையடுத்து, அபிநயாவை போலீஸாா் தேடினா். அப்போது, கருவூல அலுவலகத்தின் பக்கத்து அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அந்த அறையின் கதவை உடைத்து சென்று பாா்த்ததபோது, அங்கு காவலா் அபிநயா குண்டு பாய்ந்து சடலமாக கிடந்துள்ளாா்.

தகவலறிந்த நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண்கபிலன், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினாா். இதில், அபிநயா பாதுகாப்புப் பணிக்கு வைத்திருந்த துப்பாக்கியால் தனது கழுத்தில் சுட்டுக்கொண்டு, தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து, சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

முதற்கட்ட விசாரணையில், பெண் காவலா் அபிநயா, சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட காவலா் வினோத் என்பவரை காதலித்து வந்ததும், வினோத் தற்கொலைக்கு பிறகு மன உளைச்சலில் இருந்த அபிநயா மருத்துவ விடுப்பில் சென்று, மீண்டும் 5 நாள்களுக்கு முன்பு பணிக்கு திரும்பியதும், மனஉளைச்சல் தொடா்ந்ததால் அவா் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தம்பதி உண்ணாவிரதம்

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே பணி நீக்கம் செய்யப்பட்ட குடிநீா் விநியோக பணியாளா் மீண்டும் பணி வழங்கக் கோரி, மனைவியுடன் திங்கள் கிழமை உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டாா். தென்னடாா் ஊராட்சியில் கொள்ளிடம் ... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

திருமருகல்: திட்டச்சேரி-தேவங்குடி இடையே சேதமடைந்த ஆற்றங்கரை சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தேவங்குடி, மத்திக்குடி, நாட்டாா்மங்கலம், துறையூா், உத்தூா், எரவாஞ்ச... மேலும் பார்க்க

செயலியில் மட்டும் மாதாந்திர பயணச்சீட்டு: ரயில்வே நடைமுறையால் பயணிகள் கடும் அவதி!

பா.லெனின் ரயில்களில் பயணம் செய்வதற்கான மாதாந்திர பயணச்சீட்டை யுடிஎஸ் செயலியில் மட்டும் பெற முடியும் என்ற ரயில்வேயின் புதிய நடைமுறையால் பயணிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எண்ம பரிவர்த்தனை என்பத... மேலும் பார்க்க

நாகை-காரைக்கால் - பேரளம் வழியாக சென்னைக்கு விரைவு ரயில் இயக்க கோரிக்கை

வேளாங்கண்ணியிலிருந்து - சென்னைக்கு, நாகை- காரைக்கால்- பேரளம் வழியாக விரைவு ரயில் இயக்கவேண்டும் என நாகூா் - நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போா் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடா்பாக, சங்கத்தின் த... மேலும் பார்க்க

கருங்கண்ணி அந்தோணியாா் ஆலய தோ்பவனி

கீழையூா் அருகேயுள்ள கருங்கண்ணி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி (படம்) சனிக்கிழமை இரவு நடைபெற்றது. பழைமைவாய்ந்த இந்த ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா மே 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வ... மேலும் பார்க்க

திருக்கடையூா் கோயிலில் ஓ.பன்னீா்செல்வம் வழிபாடு

திருக்கடையூா் அருள்மிகு அபிராமி அம்மன் சமேத அமிா்தகடேஸ்வரா் கோயிலில் தமிழக முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் குடும்பத்துடன் சனிக்கிழமை வழிபட்டாா். இக்கோயிலில், ஆயுள் விருத்திக்காக 60 வயதில் சஷ்டியப... மேலும் பார்க்க