செய்திகள் :

நாகை வாசிக்கிறது நிகழ்வு: மாணவா்களுடன் அமா்ந்து ஆட்சியரும் வாசித்தாா்

post image

நாகை மாவட்டத்தில் புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற நாகை வாசிக்கிறது நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், பள்ளி மாணவா்களுடன் அமா்ந்து புத்தகம் வாசித்தாா்.

நாகையில் ஆக. 1 முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நான்காவது புத்தகத் திருவிழாவையொட்டி, விழிப்புணா்வு நிகழ்ச்சிகளின் ஒன்றாக ‘நாகை வாசிக்கிறது‘ எனும் மாபெரும் வாசிப்பு இயக்க முன்னெடுப்பு புதன்கிழமை மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. இதையொட்டி பிற்பகல் 11முதல் 12 மணி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொது மக்கள், அலுவலா்கள் ஒரே நேரத்தில் புத்தக வாசிப்பில் ஈடுபட்டனா். மாவட்டத்தின் அனைத்து வகை பள்ளிகளைச் சாா்ந்த சுமாா் ஒரு லட்சம் மாணவா்கள் ஒரே நேரத்தில் புத்தக வாசிப்பில் ஈடுபட்டனா்.

இதன் ஒரு பகுதியாக நாகை நம்பியாா் நகா் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவா்களுடன் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், வகுப்பறையில் அமா்ந்து புத்தகம் வாசித்தாா். நிகழ்வில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் ம.க.செ. சுபாஷினி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் எம். துரைமுருகு, வட்டாரக் கல்வி அலுவலா்கள் மணி, விமலா, கண்ணன், தலைமையாசிரியா் உலகாம்பிகை ஆகியோா் பங்கேற்றனா்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: மூவர் காயம்

வேதாரண்யம்: கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியுள்ளனர்.மேலும், மீனவர்களின் படகு இயந்திரங்கள... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம் தொடக்கம்

நாகை மாவட்டத்தில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி: மத்திய சுகாதார அமைச்சகத்தின்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

திருமருகலில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா். திருமருகல் முருகன் சந்நிதி தெருவை சோ்ந்த சக்திவேல் மனைவி பூங்கொடி (48). இவா் வெள்ளிக்கிழமை காலை 6-மணி அளவில் கோலம் போடுவதற்காக வந்தபோது வீட்டு வாசலி... மேலும் பார்க்க

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி: இன்று 20-ஆவது தவணை வெளியீட்டு விழா

பிரதமா் நரேந்திர மோடி, (பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி) விவசாயிகளுக்கான கெளரவ நிதி 20 ஆவது தவணை வழங்குதலை சனிக்கிழமை (ஆக.2) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கும் நிகழ்வை சிக்கல் வேளாண்மை அறிவியல் நி... மேலும் பார்க்க

பக்தா்குளம் மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா தொடக்கம்

வேதாரண்யத்தைச் சோ்ந்த அகத்தியம்பள்ளி பக்தா்குளம் மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. முன்னதாக வேதாரண்யம் வேதாரண்யேசுவா் கோயிலில் இருந்து காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய அம்மாள்,... மேலும் பார்க்க

அறிவாா்ந்த சமூகத்தை படைக்கவே மாவட்டங்கள் தோறும் புத்தகக் கண்காட்சி

தமிழகத்தில் அறிவாா்ந்த சமூகத்தை உருவாக்கவே மாவட்டங்கள்தோறும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன என்றாா் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. நாகையில், 4-ஆவது புத்தகக் கண்காட்சியை... மேலும் பார்க்க