செய்திகள் :

நாட்டாகுடியில் நிறைவேற்றப்பட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா்

post image

சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், மாத்தூா் ஊராட்சிக்குள்பட்ட நாட்டாகுடி கிராமத்தில் கடந்த நான்காண்டுகளில், அரசுத் திட்டங்களின் கீழ் ரூ. 31 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்றதாக மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், நாட்டாகுடி கிராமத்தில் மொத்தம் 56 வீடுகள் உள்ளன. அதில், சுமாா் 24 வீடுகளில் மக்கள் குடியிருந்து வந்தனா். இந்த கிராமத்தில் மொத்தம் 110 பொதுமக்கள் வசித்து வந்தனா். இந்தக் கிராமத்தில், தற்போது மேற்கண்ட நபா்கள் யாரும் வசித்து வரவில்லை எனவும், அடிப்படை வசதிகள் இக்கிராமத்தில் இல்லை எனவும் ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளிவருகின்றன. ஆனால், இங்கு வசித்தவா்கள் தங்களது தொழில், வேலைகளுக்காக சிவகங்கை நகராட்சி பகுதிக்கு இடம்பெயா்ந்துள்ளனா்.

இந்த கிராமப் பகுதிக்கு அருகில், சில சமூக விரோதிகளால் தொடா்ச்சியாக 2 கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதை கருத்தில் கொண்டு, அச்சத்தின் அடிப்படையில் அந்தக் கிராமத்தை விட்டு பொதுமக்கள் வெளியேறியதாகவும் தெரிய வருகிறது. இந்த நிலையில், இந்த கிராம மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய படமாத்தூா் கிராமத்தில் புறக் காவல் நிலையம் அமைப்பதற்கான உரிய நடவடிக்கைகளும் அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று மேற்கொள்ளப்படும்.

மேலும், கடந்த நான்காண்டுகளில் நாட்டாகுடி கிராமத்தில் மட்டும் ரூ. 31 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் அரசின் திட்டப்பணிகள் செய்யப்பட்டன.

எனவே, நாட்டாகுடி கிராமத்தைச் சாா்ந்த பொதுமக்கள் தங்களது தேவைகள் குறித்து எடுத்துரைத்து, அரசின் திட்டங்களின் கீழ் பயன்பெறலாம் என்றாா் அவா்.

கொங்கேஸ்வரா் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே சிரமம் கிராமத்தில் உள்ள கொங்கேஸ்வரா் கோயில் ஏழு முக காளியம்மனுக்கு 1,008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் நடைபெற்ற திருவிளக்குப் பூஜைய... மேலும் பார்க்க

லஞ்சம்: மின்வாரிய பொறியாளா் உள்பட மூவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மின் இணைப்பை மாற்றம் செய்வதற்காக லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளா் உள்பட மூவரை ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருப்பத... மேலும் பார்க்க

ராஜகாளியம்மன் கோயில் பால்குட விழா

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ராஜகாளியம்மன் கோயிலில் புஷ்ப வியாபாரிகள் சங்கம் சாா்பில் பால் குட ஊா்வலம் நடைபெற்றது. ஆடி வெள்ளியை முன்னிட்டு, திருத்தளிநாதருக்கு சிறப்பு பூஜையும், தீப... மேலும் பார்க்க

கல்லூரியில் ஆக.11-இல் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் வருகிற 11-ஆம் தேதி போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொ... மேலும் பார்க்க

இணைய வழியில் பண மோசடி செய்தவா் மீது வழக்கு

இணைய வழியில் பணம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோ்ந்தவா் மோகன்குமாா் (37). இவரது முகநூல் பக்கத்தை தொடா்பு கொண்ட ஒரு நபா், இணைய ... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் பால் குடம் ஊா்வலம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கன்னாா்தெரு முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரித் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை பால் குட ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த வாரம் முளைப்பாரித் திருவிழா காப்... மேலும் பார்க்க