செய்திகள் :

நாட்றம்பள்ளி: வனப்பகுதியில் விட்ட கரடி வனத்துறையினரை தாக்க முயற்சி

post image

நாட்றம்பள்ளி அருகே பிடிபட்ட கரடியை வனப்பகுதியில் விட்ட போது அது வனத்துக்குள் ஓடாமல், மீண்டும் வனத்துறை ஜீப் மீது ஏறி வனத்துறையினரைத் தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் அருகே மேல்மாமுடி மானப்பள்ளியில் உள்ள விவசாய நிலத்திற்குள் இரண்டு குட்டி கரடிகளுடன் தாய் கரடி, ஒரு ஆண் கரடி என நான்கு கரடிகள் தண்ணீர் தேடி வந்த போது அங்கு தண்ணீர் குடித்து விட்டு ஆண் கரடி மற்றும் இரண்டு குட்டி கரடிகள் கொத்தூர் காப்பு காட்டிற்கு உள்ளே சென்றுவிட்டன. ஆனால் ஒரு தாய் கரடி மட்டும் வழிதவறி பேட்டராயன் வட்டம் பகுதியில் புகுந்து மணிமேகலை என்ற பெண்ணை தாக்கிவிட்டு அங்குள்ள ராமி என்பவரின் வீட்டின் சுற்றுச் சுவர் மீது ஏறி குதித்து பூச்செடிக்குள் தஞ்சம் அடைந்தது.

பின்னர் இது குறித்து அறிந்து வந்த மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் வனச் சரக அலுவலர் குமார் தலைமையிலான வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் என அனைவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரடியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் கரடி வனத்துறையினர் விரித்த வலையில் சிக்கியது.

வலையில் சிக்கிய கரடியை கூண்டுக்குள் அடைத்து ஓசூர் வனக்கோட்ட கால்நடை மருத்துவர் ஜெயசந்திரன் என்பவரை வரவழைத்து கரடியை பரிசோதனை செய்து ஏற்கனவே 3 கரடிகள் சென்ற கொத்தூர் காப்பு காட்டில் விட்டனர்.

அப்போது அந்தக் கரடி வனப்பகுதிக்குள் செல்ல வழி தெரியாமல் மீண்டும் வனத்துறையினர் நின்று கொண்டிருந்த பக்கம் திரும்பி வந்து வனத்துறை ஜீப் மீது பாய்ந்து அவர்களை தாக்க முயன்றது. இதனைப் பார்த்த வனத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடனடியாக வனத்துறையினர் வாகனங்களில் ஹாரன் சப்தம் எழுப்பியும் கூச்சல் போட்டதால் கரடி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

கத்திரி வெய்யில் குறித்து நல்ல செய்தி சொன்ன பிரதீப் ஜான்

சென்னை: அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவிருக்கும் நிலையில் மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சில நல்ல தகவல்களை வழங்கியுள்ள... மேலும் பார்க்க

மே 5, 6ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

தமிழகத்தில் ஒருபக்கம் வெய்யில் கொளுத்திவரும் நிலையில், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு ... மேலும் பார்க்க

ஆம்பூரில் சூறைக்காற்று: 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்!

ஆம்பூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியதால் 500-க்கு மேற்பட்ட வாரை மரங்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். திருப்பத்தூர், ஆம்பூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த... மேலும் பார்க்க

பாஜக அரசுக்கு கண்டனம்! திமுக செயற்குழு தீர்மானங்கள்!

திமுகவின் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சென்னை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று(சனிக்கிழமை) காலை தொடங்கி நடைபெற்ற... மேலும் பார்க்க

அதிமுகவை அடக்கிய பாஜக; தகுதியானவருக்கே தேர்தலில் வாய்ப்பு: முதல்வர் ஸ்டாலின்!

சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.சென்னை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன... மேலும் பார்க்க

சென்னையில் ஜெ.பி. நட்டா தலைமையில் பாஜக மைய குழுக் கூட்டம்!

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தலைமையில் சென்னையில் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று(சனிக்கிழமை) காலை நடைபெற்று வருகிறது. பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு சென்னை வந்... மேலும் பார்க்க