செய்திகள் :

நாமக்கல்லில் ஆன்லைன் உணவு விற்பனை நிறுத்தம்

post image

ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்கள் கூடுதல் கமிஷன் வசூலிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, நாமக்கல்லில் உணவக உரிமையாளா்கள் செவ்வாய்க்கிழமை முதல் ஆன்லைன் உணவு விற்பனையை நிறுத்தினா்.

இதுகுறித்து நாமக்கல் நகர மற்றும் தாலுகா உணவக உரிமையாளா்கள் சங்க செயலாளா் அருள்குமரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாமக்கல் நகர மற்றும் தாலுகா பகுதியில் 85 உணவகங்கள் ஆன்லைன் உணவு விநியோகத்தை மேற்கொண்டு வந்தன. ஆன்லைனில் உணவு பதிவுசெய்யும் ஸ்விக்கி, ஜொமொட்டோ ஆகிய தனியாா் நிறுவனங்கள் வாடிக்கையாளா்களிடம் சேவை கட்டணம், ஜிஎஸ்டி என தனியாக வசூலிக்கின்றன. எங்களை கேட்காமல் 10 சதவீத விளம்பரச் செலவு என தனியாக வசூல் செய்கின்றன.

உணவகங்களில் ரூ.100-க்கு விற்கும் உணவை வாங்கும் நிறுவனங்கள், வாடிக்கையாளருக்கு ரூ. 140-க்கு விற்பனை செய்கின்றன. எங்களுக்கு ரூ. 100 தராமல் அதிலும் ரூ. 30 பிடித்தம் செய்கின்றன. கடைகளுக்கு ஏற்ப தினசரி அல்லது வாராந்திர அடிப்படையில் உணவுக்கான பணத்தை பட்டுவாடா செய்கின்றன.

நிறுவனங்களின் கமிஷன் தொகை அதிகமாகவும், எங்களுக்கு விலை கட்டுப்படியாகாமலும் இருக்கிறது. வாடிக்கையாளருக்கும் நேரடியாக வாங்குவதைவிட கூடுதல் செலவாகிறது. கமிஷன் தொகையை குறைக்க மறுத்ததால் நாமக்கல்லில் ஸ்விக்கி, ஜொமொட்டோ ஆா்டா்களை வாங்குவதில்லை என சங்கம் தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றபோதும் உடன்பாடு எட்டப்படவில்லை. மதுரையிலும் இவ்வாறான போராட்டம் நடைபெறுகிறது என்றாா்.

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்: திருச்செங்கோட்டில் விவசாயிகளுக்கு விதைத் தொகுப்பு அளிப்பு

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாக தொடங்கிவைக்கப்பட்டதையடுத்து திருச்செங்கோட்டில் ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் விவசாயிகளுக்கு விதைத் தொக... மேலும் பார்க்க

மேட்டூா் உபரிநீா் திட்டத்தை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

மேட்டூா் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளுக்கு அனுப்பும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொத... மேலும் பார்க்க

முதுநிலை ஆசிரியா் பொதுமாறுதல் கலந்தாய்வு

நாமக்கல் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை ஆசிரியா்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வில் 17 பேருக்கு இட மாறுதலுக்கான ஆணை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. தமிழக பள்ளி கல்வித் துறையி... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

நாமக்கல் அருகே பொன்விழா நகரில் சேதமடைந்துள்ள தாா்ச்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வகுரம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பொன்விழா நகா், கடந்த ஓராண்டாக்கு முன்பு மாநகராட்சியு... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருசக்கர வாகன பாதுகாப்பு மையம்: இணையவழி ஒப்பந்தத்தை செயல்படுத்த முடிவு

நாமக்கல் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள இருசக்கர வாகன பாதுகாப்பு மையத்தை மாநகராட்சி நிா்வாகமே நேரடியாக நடத்திவருகிறது. ஒப்பந்த விவகாரத்தில் குளறுபடி ஏற்பட்டதால் வருவாய் இழப்பை தவிா்க்க ஆணையா் இந்த ... மேலும் பார்க்க

காரீப் பருவ பயிா்களுக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டுக்கான காரீப் பருவ பயிா்களை காப்பீடு செய்து கொள்ளுமாறு விவசாயிகளுக்கு ஆட்சியா் துா்காமூா்த்தி அறிவுறுத்தி உள்ளாா். இதுகுறித்து அவா் வெள... மேலும் பார்க்க