செய்திகள் :

நாமக்கல்: மாவட்ட ஆட்சியர் உமா சென்னைக்கு இடமாற்றம்... கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்த திருநங்கைகள்

post image

நாமக்கல் மாவட்ட ஆட்சியராகக் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, 22.05.2023 அன்று பொறுப்பேற்று சிறந்த முறையில் பணியாற்றிய மாவட்ட ஆட்சியர் உமா, சமீபத்தில் தமிழக துணை முதலமைச்சரின் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கம் துறை கூடுதல் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து அவர், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு செயலாளராகத் தலைமை செயலகத்தில் பணியில் சேர உள்ளார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா

இதனிடையே, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மாதிவேந்தன், பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், மாதேஸ்வரன், அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள், திருநங்கைகள் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் உமாவைச் சந்தித்து, நன்றி தெரிவித்து கலந்துரையாடினர்.

மாவட்ட ஆட்சியர் தங்களுக்குச் சிறந்த முறையில் ஒத்துழைப்பு வழங்கி பல்வேறு அரசு உதவிகளைப் பெற்று தந்ததற்கு அனைத்து தரப்பினரும் நன்றி தெரிவித்தனர்.

அப்போது, திருநங்கைகள் மாவட்ட ஆட்சியருக்கு, ஆனந்த கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து கலந்துரையாடினர். மாவட்ட ஆட்சியரின் பல்வேறு உதவிகளைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா

திருநங்கைகள் மாவட்ட ஆட்சியர் உமாவிற்கு திருநீர் பூசியவுடன், மாவட்ட ஆட்சியரும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில், ஆனந்த கண்ணீர் மல்க அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும், "எப்போது எந்த உதவி தேவைப்பட்டாலும் என்னை உடனடியாக அழையுங்கள்" என்று கூறினார். இந்தச் சம்பவம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

EPFO: இனி ரூ.5 லட்சம் வரை பி.எஃப் கணக்கில் எளிதாக பணம் பெறலாம்.. எப்படித் தெரியுமா?

பி.எஃப் - ஆத்திர அவசரம் தொடங்கி ஓய்வுக்காலம் வரை பெரும்பாலான மக்களுக்கு கைக்கொடுக்கும் ஒன்று.ஓய்வுக்காலம் தவிர, எப்போது இந்தத் தொகையை எடுப்பதாக இருந்தாலும் சரி, அதற்கென சில நிபந்தனைகளும், செக்குகளும் ... மேலும் பார்க்க

வேலூர்: சுட்டிக்காட்டிய விகடன்... பயன்பாட்டிற்கு வந்த ஒடுகத்தூர் பேருந்து நிலைய நிழற்கூடம்!

வேலூர் மாவட்டத்திலுள்ள ஒடுகத்தூர் பேரூராட்சி பகுதியானது மேல் அரசம்பட்டு, பீஞ்சமந்தை போன்ற மலை கிராமங்களை இணைக்கும் பகுதியாக உள்ளது. இந்த ஒடுகத்தூர் பேரூராட்சி பகுதியில் இருந்து தினந்தோறும் வேலூர், சென... மேலும் பார்க்க

ரயில் டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்படுகிறதா? - எப்போது, எவ்வளவு தெரியுமா?

இந்தியாவின் 'பாக்கெட் ஃபிரெண்ட்லி' டிராவல் ஆப்ஷன் என்றால், அது 'ரயில்' தான். சாதாரண மக்கள் முதல் பணக்காரர்கள் வரை யார் வேண்டுமானாலும், அவர்களது பட்ஜெட்டிற்கு ஏற்ப எளிதாகவும், வசதியாகவும் ரயிலில் பயணம்... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயிலுக்குள் திடீரென கொட்டிய 'நீர் வீழ்ச்சி'; ரயில்வே சொல்லும் காரணம்!|வைரல் வீடியோ

வந்தே பாரத் - இந்தியாவின் அதிநவீன மற்றும் மிக வேகமாக பயணிக்கும் ரயில் என்று இந்த ரயில் குறித்து மத்திய அரசு பெருமை கொள்கிறது. ஆனால், இந்த ரயில் குறித்தும், அதன் சேவைகள் குறித்தும் அவ்வப்போது புகார்கள்... மேலும் பார்க்க

பிறகு ஏன் கலாய்க்க மாட்டார்கள் ‘விளம்பர மாடல் அரசு’ என்று?

அனைவருக்கும் பசுமை வணக்கம்! மாம்பழங்களுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை என்று மாம்பழங்களை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்; கரும்புக்கான நிலுவைத் தொகையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று முதல்வருக்க... மேலும் பார்க்க