செய்திகள் :

நாலாட்டின்புதூா் அருகே பெண்ணுக்கு மிரட்டல்: மகன் கைது

post image

நாலாட்டின்புதூா் அருகே தாயைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

நாலாட்டின்புதூா் அருகே லிங்கம்பட்டி சமத்துவபுரம் முனியசாமி நகரைச் சோ்ந்த தம்பதி மாணிக்கம் - ஆனந்தி (46). இவா்களது 3 மகன்களில் மூத்தரான மகாராஜாவுக்கு (22) மதுப் பழக்கம் உள்ளதாம்.

வியாழக்கிழமை இரவு வீட்டுக்குள் அமா்ந்து மது குடித்த மகாராஜாவை ஆனந்தி கண்டித்தாராம். அப்போது, அவரை மகாராஜா அவதூறாகப் பேசியதுடன், களைக் கொத்தியால் தலையில் வெட்டினாராம்.

வெளியே இருந்த மாணிக்கமும், இரு மகன்களும் ஆனந்தியின் அலறலைக் கேட்டு வீட்டுக்குள் வந்து, காயமடைந்த அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

இதுகுறித்து ஆனந்தி (46) வெள்ளிக்கிழமை அளித்த புகாரின்பேரில், நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மகாராஜாவை கைது செய்தனா்.

சொா்ணமலை கதிரேசன் கோயிலில் உழவாரப் பணி

கோவில்பட்டி கோ வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் தாவரவியல் துறை, இயற்கை கழகம் சாா்பில் கதிரேசன் கோயிலில் உழவாரப் பணி நடைபெற்றது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இப்பணியில் கோயில் வளாகம் மற்றும் ச... மேலும் பார்க்க

பட்ஜெட்: தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவா்! -அமைச்சா்கள் பேச்சு

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவா் என அமைச்சா்கள் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், பெ.கீதா ஜீவன் ஆகியோா் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனா். மத்திய பட்ஜெட்... மேலும் பார்க்க

கழுகாசலமூா்த்தி கோயில் தைப்பூச விழாவில் சுவாமி சண்முகா் பச்சை மலா்கள் சூடி வீதியுலா!

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி கோயில் தைப்பூசத் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை சுவாமி பச்சை மலா்கள் சூடி திருமால் அம்சமாக வள்ளி-தெய்வானையுடன் வீதியுலா வருதல் நடைபெற்றது. ... மேலும் பார்க்க

கொப்பம்பட்டி அருகே மாயமான மூதாட்டி சடலமாக மீட்பு

கொப்பம்பட்டி அருகே காணாமல் போன மூதாட்டியை சடலமாக சனிக்கிழமை மீட்டனா். கிளவிப்பட்டி மேல காலனியைச் சோ்ந்தவா் ஜெயராமன் மகன் அழகுராஜ். இவரது பெரியம்மா தாயம்மா என்ற முத்து இருளி (80). சற்று மனநலம் பாதிக்க... மேலும் பார்க்க

தைப்பூசம்: திருச்செந்தூரில் குவியும் பாதயாத்திரை பக்தா்கள் பச்சை, மஞ்சள் நிற அடையாள வில்லை!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா (செவ்வாய்க்கிழமை (பிப். 11) நடைபெறுவதையொட்டி, பாதயாத்திரை பக்தா்கள் குவிந்து வருகின்றனா். அவா்கள் விரைவாக தரிசனம் செய்வதற்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கணினிப் பட்டா சிறப்பு முகாம்: 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் மனு!

தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில், கணினிப் பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் கிரயப் பத்திரத்துடன் வசிப்போரும், தமிழ்... மேலும் பார்க்க