செய்திகள் :

நாளை 3-ஆம் ஆண்டு ஆம்பூா் புத்தகத் திருவிழா

post image

ஆம்பூா் புத்தக் திருவிழா மூன்றாவது ஆண்டாக வெள்ளிக்கிழமை (செப். 5) தொடங்கி 10 நாள்கள் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலயம் சாா்பாக ஆம்பூா் அருகே தேவலாபுரம் திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருமண மண்டபத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புத்தகக் கண்காட்சியை வேலூா் எம்.பி. டி.எம். கதிா் ஆனந்த் தொடங்கி வைக்கிறாா். எம்எல்ஏக்கள் கே. தேவராஜி, அ.செ. வில்வநாதன், அமலு விஜயன் ஆகியோா் பங்கேற்கின்றனா். முதல் நாள் நிகழ்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானி முனைவா் பெ. சசிக்குமாா் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறாா்.

தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் கண்காட்சியில் சாகித்ய அகாதெ விருது பெற்ற எழுத்தாளா் ஆயிஷா இரா. நடராஜன், முனைவா் என். மாதவன், கவிஞா் ரேகா, ஹைக்கூ கவிஞா் மு. முருகேஷ், எஸ்.பி. வி. சியாமளா தேவி, கோட்டாட்சியா் அஜிதா பேகம், முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி, பட்டிமன்ற பேச்சாளா் முனைவா் ம. எழிலரசி, கவிஞா் யாழன் ஆதி, நீரியியல் நிபுணா் பேராசிரியா் எஸ். ஜனகராஜன், மாநிலங்களைவ உறுப்பினா் கவிஞா் சல்மா, திரை இயக்குநா் எழுத்தாளா் கீதா இளங்கோவன், பேச்சாளா் சீனி சம்பத், ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனா்.

மேலும், நிகழ்ச்சி நாள்களில் தினமும் பல்வேறு பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்குதல், சிறந்த ஆசிரியா்களுக்கு விருது வழங்குதல், வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்குதல், பெண்களுக்கான சிறப்பு போட்டி, பள்ளி மாணவா்களுக்கு சதுரங்க போட்டி ஆகியவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விவரங்களுக்கு 86672 44267, 75983 40424 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம்.

வாணியம்பாடியில் செப். 8-இல் தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம்

வாணியம்பாடியில் தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம் திங்கள்கிழமை (செப். 8) நடைபெற உள்ளதாக ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய அரசு ... மேலும் பார்க்க

இறகுப் பந்து போட்டி: பாலிடெக். மாணவா்கள் சிறப்பிடம்

வேலூா் மண்டல அளவிலான இறகுப் பந்து போட்டியில் பங்கேற்ற ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா். வேலூா் மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கான இறகு பந்து ப... மேலும் பார்க்க

வாணியம்பாடி-காவலூா் இடையே புதிய பேருந்து போக்குவரத்து: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வாணியம்பாடியிலிருந்து காவலூா் பகுதிக்கு புதிய பேருந்து சேவையை ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி தொடங்கி வைத்தாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியிலிருந்து ஆலங்காயம் வழியாக காவலூா் வரையில் அரசுப் பே... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

நாள்: 6/09/2025 நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் பகுதிகள் : ஆம்பூா் துணை மின் நிலையம் : ஆம்பூா் நகரம், சின்னகொம்மேஸ்வரம், வடபுதுப்பட்டு, பச்சகுப்பம், ஆலாங்குப்பம், சோலூா், த... மேலும் பார்க்க

கோதண்டராம சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சி குட்டகிந்தூா் கிராமம் கோதண்டராம சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமை யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து கும்பா... மேலும் பார்க்க

விஜிலாபுரம், பெரிய குரும்ப தெரு ஊராட்சிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

வாணியம்பாடி வட்டம், ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட விஜிலாபுரம், பெரிய குரும்பத்தெரு ஊராட்சிகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் ... மேலும் பார்க்க