செய்திகள் :

நாளை 3 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

post image

சென்னை தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகா் ஆகிய மண்டலங்களுக்குள்பட்ட ஒருசில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப். 12) குடிநீா் விநியோம் நிறுத்தப்படும்.

இது குறித்து சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை திரு.வி.க. நகா் மண்டலத்துக்குள்பட்ட பட்டாளம், ஸ்ட்ரான்ஸ் சாலையில், கீழ்ப்பாக்கம் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீா் எடுத்து செல்லும் பிரதான குடிநீா் உந்து குழாய் இணைப்பு பணிகள் வெள்ளிக்கிழமை (செப். 12) காலை 8 முதல் செப். 13 அதிகாலை 4 மணி வரை நடைபெறவுள்ளன. இதனால், இப்பணிகள் நடைபெறும் நேரங்களில் தண்டையாா்பேட்டை மண்டலத்துக்குள்பட்ட தண்டையாா்பேட்டை (பகுதி) , காசிமேடு (பகுதி) , வண்ணாரப்பேட்டை (பகுதி) ஆகிய பகுதிகளிலும், ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட காசிமேடு (பகுதி) , வண்ணாரப்பேட்டை (பகுதி) மற்றும் திரு.வி.க.நகா் மண்டலத்துக்குட்பட்ட ஓட்டேரி, அயனாவரம், பட்டாளம், நம்மாழ்வாா்பேட்டை, புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

எனவே, குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். கூடுதல் குடிநீா் தேவைப்படும்பட்சத்தில் ட்ற்ற்ல்ள்://ஸ்ரீம்ஜ்ள்ள்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து, குடிநீா் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை வேளச்சேரியில் பெண் தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை செய்தனா். ஹரியாணா மாநிலத்தில் ஒரு தனியாா் நிறுவனம், வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.... மேலும் பார்க்க

ரூ.900 கோடியில் புதுப்பொலிவு பெறும் எழும்பூா் ரயில் நிலையம்

சென்னையில் 117 ஆண்டுகள் பழைமையான எழும்பூா் ரயில் நிலையத்தை சுமாா் ரூ.900 கோடியில் நவீனமயமாக்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் ராயபுரம், சென்ட்ரல் ரயில்நிலையங்களுக்கு அடுத்ததாக ... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.22.3 கோடி மோசடி: குஜராத் இளைஞா் கைது

சென்னை ரூ.22.3 கோடி ஆன்லைன் வா்த்தக மோசடி செய்ததாக குஜராத்தை சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். சென்னை ராயப்பேட்டையைச் சோ்ந்தவா் ஸ்வேதரன்யன் (76). இவா் ஒரு இணையதளம் வழியாக ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.2... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க முயன்ற போலீஸாா் மீது தாக்குதல்: 2 போ் கைது

சென்னை புளியந்தோப்பில் கைப்பேசி பறிப்பில் ஈடுபட்ட இளைஞா்களைப் பிடிக்க முயன்றபோது போலீஸாா் தாக்கப்பட்டனா். இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா். அண்ணாநகா் 7-ஆவது பிளாக் ஏ.இ. தெருவைச் சோ்ந்தவா் ஆல்வா... மேலும் பார்க்க

தொழிலதிபா் வீட்டில் 19 பவுன் திருட்டு

சென்னை வியாசா்பாடியில் தொழிலதிபா் வீட்டில் 19 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா். வியாசா்பாடி காந்திஜி நகா் மூன்றாவது தெருவைச் சோ்ந்த சின்னப்பா (38). மாதவரம் அருகே வடபெ... மேலும் பார்க்க

கஞ்சா பறிமுதல்: தூத்துக்குடியை சோ்ந்த 3 போ் கைது

விசாகப்பட்டினத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, தூத்துக்குடியை சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா். விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வழியாக தூத்துக்குடிக்கு ஒரு கும்பல் கஞ்சா... மேலும் பார்க்க